14. |
நிலநீர்
வளிவிசும் பென்ற நான்கின்
அளப்பரி யையே
நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழல்
ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை |
5 |
போர்தலை
மிகுத்த வீரைம் பதின்மரொடு
துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை
அக்குர னனைய கைவண் மையையே
அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர்பீ டழித்த செருப்புகன் முன்ப |
10 |
கூற்றுவெகுண்டு
வரினு மாற்றுமாற் றலையே
எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து
நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை
வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும்
வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பன் |
15 |
ஒடுங்கீ
ரோதிக் கொடுங்குழை கணவ
பல்களிற்றுத்
தொழுதியொடு வெல்கொடி நுடங்கும்
படையே ருழவ பாடினி வேந்தே
இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின் |
20 |
முன்றிணை
முதல்வர் போல நின்றுநீ
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅ லியரோவிவ் வுலகமோ டுடனே. |
துறை
- செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணமும், சொற்சீர்வண்ணமும். தூக்கு-செந்தூக்கு.
பெயர் - சான்றோர் மெய்ம்மறை (12)
(ப
- ரை) 1.
பூதங்கள் ஐந்தையும் எண்ணாது தீயை
ஒழித்தது மேல் விளக்கத்துக்கு உவமமாக (4) எண்ணுகின்றவற்றோடு
கூட்டவேண்டி யென்பது.
3.
ஈண்டுக் கோளென்றது விளக்கமில்லா இராகுகேதுவென்னும்
இரண்டும் நீக்கி நின்ற ஏழினும், சிறப்புப்பற்றி வேறு எண்ணப்பட்ட
திங்கள் ஞாயிறென்னும் இரண்டும் நீக்கி, நின்ற ஐந்தையுமென்பது.
4.
ஐந்தென்று தொகை கூறியது நாள்கோளென்னும்
அவற்றைத் 1தொகைக்கூற்றின் ஒரோவொன்றாக்க வென்பது.
11.
எழுமுடியென்பது ஏழு அரசரை வென்று அவர்கள்
ஏழுமுடியானுஞ் செய்ததோர் ஆரமாம்.
12.
நோன்புரித் தடக்கையென்றது வலி 2பொருந்துதலையுடைய
தடக்கையென்றவாறு.
ஈண்டுச்
சான்றோரென்பது போரில் அமைதியுடைய வீரரை.
மெய்ம்மறை-மெய்புகு கருவி; மெய்ம்மறையென்றது
அச்சான்றோர்க்குமெய்புகு கருவிபோலப் போரிற் புக்கால் வலியாய்
முன்னிற்றலின்.
இச்சிறப்பு
நோக்கி இதற்கு, 'சான்றோர் மெய்ம்மறை' என்று
பெயராயிற்று.
13.
வானுறைமகளிர் நலன் இகல் கொள்ளுமென்றது வானர
மகளிர் அழகிற்கு அவளையொப்பேன் யானே யானேயென்று
தங்களில் மாறுகொள்ளுமென்றவாறு.
15.
ஒடுங்கீரோதி - 3சுருள்.
நிலமுதற் பூதம்
நான்கும்போலப் (1) பெருமை அளத்த லரியை
(2); நாண்மீன்முதல் (3) ஐந்தையும் விளக்கத்தால் ஒப்பை (4); கை
வண்மையால் அக்குரனென்பவனை யொப்பை (7); அன்றி முன்ப (9),
நின்வலி இருக்கும்படி சொல்லிற் கூற்று வெகுண்டுவரினும் அதனையும்
மாற்றும் வலியையுடையை (10); ஆதலாற் சான்றோர் மெய்ம்மறை (12),
கொடுங்குழை கணவ (15), படையேருழவ, பாடினி வேந்தே (17),
நின்குடி முன் முதல்வர்போல நின்று (20) நல்லிசையை நிலைப்பித்து
(21) இவ்வுலகத்தோடு கூடக் கெடாதொழிகையாக (22) என
வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் பல குணங்களையும் ஆற்றலையும்
ஒருங்கு கூறி வாழ்த்தியவாறாயிற்று.
'அளப்பரியையே'
(2) எனச் சொற்சீரடி வந்தமையாற்
4சொற்சீர் வண்ணமுமாயிற்று; ஈண்டுச் சொற்சீரென்றது அளவடியிற்
குறைந்தும் வஞ்சியோசையன்றி அகவலோசையாயும் வரும்
அடியினை.
(கு
- ரை) 1 - 2. நிலத்தின் பரப்பும் நீரின் ஆழமும்
வளியின் செலவும் விசும்பின் ஓக்கமும் அளப்பரியன வாதலின்,
அவற்றை உவமை கூறினார்; பல்வகைப் பெருமைக்கு அவற்றைக்
கூறுதல் மரபு; பதிற். 24 : 15-6; "இருமுந்நீர்க்
குட்டமும்,
வியன்ஞாலத் தகலமும், வளி வழங்கு திசையும், வறிது நிலைஇய
காயமும், என்றாங், கவையளந்தறியினு மளத்தற் கரியை" (புறநா.
20 : 1 - 5); "நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று, நீரினு
மாரள வின்றே" (குறுந். 3 : 1-2); 'மண்ணினும்
வானினு மற்றை
மூன்றினும், எண்ணினும் பெரியதோ ரிடர்" (கம்ப.
அயோமுகி, 99).
பகைவர் பிழை செய்தலைப் பொறுத்தலில் நிலத்தைப் போன்றும்,
அவர் வழிப்படின் அவரை அளித்தலில் நீரைப் போன்றும், சதுரங்க
வலியிலும் மனவலியிலும் வளியைப் போன்றும், ஆராய்ச்சியின்
விசும்பைப் போன்றும் அவ்வத்தன்மையின்கண் அளத்தற்கு
அரியையென உவமையைப் பொருத்திக்கொள்க (புறநா.
2 : 1-8,
உரை)
உம்மையும் உருபும்
விரித்தற்குப் பொருந்தாது எழுவாயாய்
நான் கென்னும் தொகைச் சொற்பயனிலை கொண்டுநின்றது (தொல்.
இடை. 43, ந.)
3 - 4. நாள்-நட்சத்திரங்கள்.
கனை அழல் - மிக்க தீ.
பல பொருளினும்
உளதாகிய கவின் ஓரிடத்துவரின், அதற்கு
உவமை யாமென்பதற்கு மேற்கோள் (தொல்.
உவம. 24, இளம்.)
1 - 4. இதில் எண்ணுவண்ணம் வந்தது (இ. வி.
757)
5 - 7. ஈரைம்பதின்மர்-துரியோதனன்
முதலிய கௌரவர்
நூற்றுவர்; இது தொகைக் குறிப்புப் பெயர். துப்பு-துணைவலி;
"மூவருளொருவன் றுப்பா கியரென" (புறநா. 122
: 5) அக்குரன் -
பாரதத்தில் கூறப்படுபவனும்.
தலையெழு வள்ளல்களுள்
ஒருவனுமாகிய அக்குரன் போலும்;
கர்ணனென்று நினைத்தற்கும் இடமுண்டு; ஆதாரம் கிடைக்கவில்லை.
8 - 9. கடந்து
- வஞ்சியாது எதிர்நின்று. தும்பை .
அதிரப்பொருவோர் சூடும் பூ. பகைவரது போரையும் பீட்டையும்
அழித்த; பீடு-பெருமை. செரு புகல் முன்ப - போரை விரும்புகின்ற
வலியையுடையோய். பகைவர் போர்பீடழித்தும் மேலும் போரை
விரும்புபவனென்றவாறு (புறநா. 31 : 9)
10. வெகுளியிற்
கூற்றம் சிறத்தலின், 'கூற்று வெகுண்டு வரினும்'
என்றார்; "காலனனைய கடுஞ்சின முன்ப" (பதிற்.
39 : 8) என்பதன்
குறிப்பைப் பார்க்க; "மாற்றருங் கூற்றம்" (தொல்.
புறத். .24). ஆதலின்
அவனை இங்கே கூறினார். கூற்றம் வரினும் மாற்றும் ஆற்றல்: கலித்.
43 : 10; குறள், 765; சீவக.
1114.
11. ஞெமர்தல்
- பரத்தல், அகலம் - மார்பு. எழுமுடி கெழீஇய
அகலம் : பதிற். 16 : 17, 40 : 13, 45
: 6; சிலப். 28 : 169.
பகைவர் முடிப்பொன்னால்
ஆரம் செய்து அணிவதோடு
அதனால் கழல் செய்து புனைதலும் உண்டு (புறநா.
40 : 1 - 4)
12. சான்றோர்-வீரர்
(பதிற்.82:13). மெய்ம்மறை - கவசம்
போன்றவனே; விளி.
13 - 5. சேரன்
பெருந்தேவியின் எழில் கூறப்படும்.
14. மிகையெனக்
கருதி இழை அணியப்படவில்லை; இழை
இங்கே தலைக்கலன். கூந்தலின் இயற்கை மணங்கருதி வண்டுகள்
மொய்த்தன.
15.மகளிரைச்
சார்த்து வகையாற் பாடுதலன்றித் தனித்துப்
பாடுதல் மரபன்றாதலின் இங்கே சோனொடு சார்த்தி அவன்
மாதேவியைச் சிறப்பித்தார்; "மக்களுட் பெண்பாலைப் பாடுதல்
சிறப்பன்மையின், 'செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ' (புறநா.
13 : 6)
என்றாற் போலச் சிறுபான்மை ஆண்மக்களோடு படுத்துப்பாடுப"
(தொல். புறத் .26, ந). இந்நூலுள் பின்னரும்
இங்ஙனம் வருதல்
காண்க; பதிற். 24 : 11, 38 : 10, 42
: 7, 55 : 1, 61 : 4, 65 : 10,
70 : 16, 88 : 36, 90 : 50.
14
- 5. "தன்னிறங் கரந்த வண்டுபடு கதுப்பின், ஒடுங்கீ
ரோதியொண்ணுதல்" (பதிற். 81 : 27 -
8)
16
- 7. தொழுதி - தொகுதி. நுடங்கும் - அசையும். படை ஏர்
உழவ-படையை ஏராக உடைய உழவ. பாடினிவேந்து; விறலியருக்கு
ஆபரணங்களை அளித்தலின் இங்ஙனம் கூறினார்; பதிற்.
17 : 14.
18.
மணிகள் இடையிடையே அழுத்தப்பெற்ற பொன்னணிகளால்
விளங்கும் சக்கரம்; என்றது ஆக்ஞா சக்கரத்தை.
19.
கடலக வரைப்பு - பூமி. இப்பொழிலென்றது நாவலந்தீவை.
18
- 9. திகிரியால் ஆண்ட.
20.
முன் திணை முதல்வர் - குலத்தில் முன் இருந்த முதல்வர்;
திணை-குலம்.
முன்னோர்
வழியொழுகுதல்: மதுரைக். 192; புறநா. 58 : 25.
21.
நல்லிசையை நிலைபெறச் செய்து (பதிற். 86
: 5)
22.
தவாஅலியர் - கெடாமல் இருப்பாயக.
மு.
இது பரவற்கண் வந்த செந்துறைப் பாடாண் பாட்டு;
இதனை வாழ்த்தியலென்பர் (தொல். புறத். 27. ந.)
(பி
- ம்) 4. வந்தொருங்கு. 10.வரினும் பாற்றும். 12. சான்றோர்
மேமறை. 14. வண்டுபடு துப்பின், (4)
1நாளும்
ஏனைக் கோளும் பலவாக இருப்ப அவற்றை
ஒவ்வொன்றாக நிறுத்தித் திங்கள் முதலியவற்றோடு சேர்த்து
ஐந்தென்று எண்ணியது அவற்றின் தொகுதியைக் கருதியதென்றபடி.
2புரித்தடக்கையென
ஒற்று மிகுதலின் முதனிலைத் தொழிற்
பெயராக்கி, பொருந்துதலையுடைய தடக்கையென உரை வகுத்தார்.
3சுருள்
- ஐம்பாலுள் ஒன்று (பு.
வெ. 223, உரை)
4சொற்சீர்வண்ணம்
பாஅவண்ணமென்றுங் கூறப்படும் (தொல்.
செய்யுள். 213, பேர்). சொற்சீரடியின் இலக்கணம்: தொல்.
செய்யுள்.
123, பேர்.
|