15. |
யாண்டுதலைப்
பெயர வேண்டுபுலத் திறுத்து
முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு
மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி
நிரை களிறொழுகிய நிரைய வெள்ளம்
|
5 |
பரந்தாடு
கருங்கழி மன்மருங் கறுப்பக்
கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர
அழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத்
தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பின்
வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப் |
10 |
பீரிவர்பு
பரந்த நீரறு நிறைமுதற்
சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற்
புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும்
புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பின்
அறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின் |
15 |
பகைவர்
நாடுங் கண்டுவந் திசினே
கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு
விழவறு பறியா முழவிமிழ் மூதூர்க்
கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்துச் |
20 |
சீர்பெறு
கலிமகி ழியம்பு முரசின்
வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை
தாரணிந் தெழிலிய தொடிசிதை மருப்பிற்
போர்வல் யானைச் சேர லாத
நீவா ழியரிவ் புலகத் தோர்க்கென |
25 |
உண்டுரை
மாறிய மழலை நாவின்
மென்சொற் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த
வெய்துற வறியாது நந்திய வாழ்க்கைச்
செய்த மேவ லமர்ந்த சுற்றமோ
டொன்று மொழிந் தடங்கிய கொள்கை யென்றும் |
30 |
பதிபிழைப்
பறியாது துய்த்த லெய்தி
நிரைய மொரீஇய வேட்கைப் புரையோர்
மேயின ருறையும் பலர்புகழ் பண்பின்
நீபுறந் தருதலி னோயிகந் தொரீஇய
யாணர்நன் னாடுங் கண்டுமதி மருண்டனென் |
35 |
மண்ணுடை
ஞாலத்து மன்னுயிர்க் கெஞ்சா
தீத்துக்கை தண்டாக் கைகடுந் துப்பிற்
புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி
ஏம மாகிய சீர்கெழு விழவின்
நெடியோ னன்ன நல்லிசை |
40 |
ஒடியா
மைந்தநின் பண்புபல நயந்தே. |
துறை-செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம் -
ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு. பெயர் - நிரையவெள்ளம் (4)
(ப
- ரை) நீ
சீற்றமொடு (2) அழல்கவர் மருங்கின் உருவறக்
கெடுத்து (7) என முடிக்க.
4.
நிரையவெள்ள மென்றது பகைவர்க்கு
1நிரையபாலரைப்போலும் படைவெள்ளமென்றவாறு; நிரையமென்றது
நிரையத்து வாழ்வாரை.
இச்சிறப்பானே
இதற்கு, ‘நிரைய வெள்ளம்’ என்று
பெயராயிற்று.
5. மன்மருங்கறுப்பவென்றது
மன் மருங்கறுப்பவேண்டி
யென்றவாறு.
7. கெடுத்தென்பதனைக்
கெடுக்கவெனத் திரிக்க.
தொல்கவினழிந்த
கண்ணகன் வைப்பினையும் (8) புல்லாள்
வழங்கும் (12) புல்லிலைவைப்பினையுமுடைய புலஞ்சிதை (13) நாடு
(15) என முடிக்க
8. தொல்கவினழிந்த
வைப்பென்றது சூடுண்டு அழிந்த
ஊர்களை. புல்லிலைவைப்பென்றது குடிபோய்ப் பாழ்த்த ஊர்களை.
9. சுரை
கலிக்கவெனத் திரிக்க.
10
- 11. நிறைமுதற் காந்தளெனக் கூட்டுக.
11 -
3. மூதில்லையுடைய புல்லிலைவைப்பெனக் கூட்டுக.
13. புல்லிலை
வைப்பென்றது புல்லிய இலைகளாலே
2வேயப்பட்ட ஊரென்றவாறு; இதனை, 'நூலாக் கலிங்கம்' (பதிற்.
12 : 21) என்றது போலக் கொள்க.
12. புல்லாளென்றது
புல்லிய தொழிலையுடைய ஆறலைகள்
வரை. அரம்பிற் (13) பகைவர் (15) என முடிக்க.
13. அரம்பென்பது
குறும்பு.
20 -
21. சீர்பெறு கலிமகிழியம்பும் முரசின் வயவரென்றது
வெற்றிப்புகழ்பெற்ற மிக்க மகிழ்ச்சியானே ஒலிக்கின்ற
முரசினையுடைய வீரரென்றவாறு.
19 -
20. நியமத்து இயம்புமென முடிக்க.
24 -
6. நீ வாழியரிவ்வுலகத்தோர்க்கெனத் திருந்துதொடை
வாழ்த்தவென முடித்து, இவ்வுலகத்தோர் ஆக்கத்தின் பொருட்டு நீ
வாழ்வாயாகவெனச்
சொல்லித் திருந்திய நரப்புத் தொடையினை
யுடைய யாழொடு வாழ்த்தவென வுரைக்க.
தொடையொடென
விரியும் ஒடு வேறுவினையொடு.
25 - 6. மழலைநாவினையும்
3மென்சொல்லினையுமுடைய
கலப்பையரென கொள்க.
வெய்துறவறியாது
நந்திய வாழ்க்கையினையும் (27) ஒன்று
மொழிந்து அடக்கிய கொள்கையினையும்(29) நிரையமொரீஇய
வேட்கையினையும் உடைய புரையோர் (31) செய்த மேவலமர்ந்த
சுற்றத்தோடு (28) பதி பிழைப்பறியாது துய்த்தலெய்தி (30)
மேயினருறையும் (32) நாடென (34) மாறிக் கூட்டியுரைக்க.
28. செய்த மேவலமர்ந்த
சுற்றமென்றது (சுற்றத்) தலைவர்
செய்த காரியங்களைப் பின் சிதையாது தாம் அவற்றை
மேவுதலையுடைய அத்தலைவரொடு மனம்பொருந்தின
சுற்றமென்றவாறு.
செய்தனவென்பது
கடைக்குறைந்தது.
ஈத்துக்கை தண்டா
(36) மைந்த (40) என முடிக்க.
37. 4புரைவயிற்
புரைவயிற் பெரியநல்கியென்றது உயர்ந்த
தேவாலயமுள்ள இடங்களிலே உயர்ந்த ஆபரணம் உள்ளிட்டவற்றைக்
கொடுத்தென்றவாறு.
நின் பகைவர்
நாடும் கண்டுவந்தேன் (15); அதுவேயன்றி
வேந்தே, வெறுக்கை (21), சேரலாத (23), நீ புறந்தருதலின்,
நோக்கந்தொரீஇய நின் (33) நாடும் கண்டு மதிமருண்டேன் (34);
இவை இரண்டும் காணவேண்டின காரணம் யாதெனின், மைந்த,
நின் பண்பு பலவற்றையும் காண நயந்து (40) என வினைமுடிவு
செய்க.
இதனாற் சொல்லியது
அவன்வென்றிச் சிறப்பும் தன்
நாடுகாத்தற் சிறப்பும் உடன் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. யாண்டு தலைப்பெயர - ஓராண்டு செல்ல.
வேண்டுபுலத்து இறுத்து - தான் அழிக்கவேண்டிய நாட்டிற்
சென்று தங்கி (மதுரைக.் .234. ந.)
1 - 2 எரி பரப்புதல்
: இதனை 'எரி பரந்தெடுத்தல்'
என்னும் துறையின்பாற் படுத்துவர் (பதிற்.
25 : 7, 71 : 9 - 10;
மதுரைக். 126, 154 - 6; கலித்.
13 : 1 - 2; புறநா. 6 : 21 - 2,
7 : 8 - 9, 16 : 17, 23 : 10 - 11)
3. தலைஇய-பெய்த;
இது மதிலுக்கு அடை. மதின்மரம் -
கணையமரம்.
3-4. முருக்கி-அழித்து.
கணைய மரத்தைக் களிறுகள்
முருக்கின. யானை கொம்பால் இடிக்கும்பொழுது மதிற்கதவுகளுக்குப்
பாதுகாப்பாக அவற்றின் பின்னே அமைக்கப்படுவது கணைய மரம்
(பதிற். 16 : 5 - 8)
4. களிறொழுகிய
நிரைய வெள்ளம் - யானைகள்
வரிசையாகச் சென்ற, நகரபாலரைப் போன்ற படை. படையில்
யானை தலைமையுடையதாதலின் அதனை எடுத்துக்கூறினார்;
"யானையுடையபடை" (இனியவை. 5);
கஜரததுரகபதாதி
யென்பது வழக்கு. நிரைய வெள்ளம் :
"நிரைய வொள்வா ளிளையர் பெருமகன்" (குறுந்.
258 : 6); "நிரையத்
தானை" (சிலப். .26 : 37)
5. பரவி ஆடுகின்ற
கழங்குகள் அழிதற்குக் காரணமான
அரசர்களின் குலத்தை முற்றக் கெடுப்பதற்கு. கழங்கு அழிதலாவது எண்ணுதற்குக் கருவியாகவுள்ள
கழங்குகள் பொருளின் மிகுதியால்
போதாவாதல். இங்கே பகையரசர்களின் மிகுதிபற்றிக்கழங்கு அழிதல் கூறினார். கழங்கு
- கழற்சிக்காய். எண்ணுதற்கு இது கருவியாதல்,
"எல்லாமெண்ணி னிடுகழங்கு தபுந" (பதிற்.
32 : 8) என்பதனாலும்
அறியப்படும்; இவ்வழக்கம் இன்னும் மலைநாட்டில் உள்ளது.
6. கொடி -
தீக்கொழுந்து. பிசிர - சிறிது சிறிதாகச்
சிதறும்படி (பதிற். 25 : 7)
7. உருஅற - நாட்டின் பழைய உருவம் கெடும்படி. 8.
வைப்பு - ஊர்கள்.
9. வேளை -
ஒரு செடி. சுரை - சுரைச்கொடி. கலித்து -
தழைத்து வளர; எச்சத் திரிபு. அழிந்த நாட்டில் வேளையும்
சுரையும் படர்தல்: "வேரறுகு பம்பிச் சுரைபரந்து வேளைபூத், தூரறிய
லாகா கிடந்தனவே....................முசிரியார் கோமான், நகையிலைவேல்
காய்த்தினார் நாடு" (முத்.)
10. பீர் இவர்பு
- பீர்க்கங் கொடி ஏறி. 'நிறைமுதல் -
நீர்ச்சாலினிடத்தில் (சீவக. 69, ந.
மேற்.)
11. காந்தள் முதல் - காந்தட்கிழங்கு; நீரற்றமையின் அது
சிதைந்தது.
12. புலவு வில்
- எய்த அம்பினை மீட்டும் தொடுத்தலின்
புலால் நாற்றத்தையுடைய வில் (மதுரைக். 142,
ந.). வில் உழவு -
விற்றொழிலாகிய உழவு. புல்லாள் - வழிப்பறி செய்வோர்.
14. துப்பு எதிர்ந்த
- வலியொடு மாறுபட்டெழுந்த (புறநா.
54 : 8)
15. வந்திசின்
- வந்தேன்; கசின் தன்மைக்கண் வந்தது
(புறநா. 22 : 36, உரை).
16. கடல - முத்து,
பவளம் முதலிய நெய்தல் நிலத்துப்
பொருள்கள்; கல்ல - மணிமுதலாகிய குறிஞ்சி நிலத்துப் பொருள்கள்;
யாற்ற - முல்லையிலும் மருதத்திலும் உள்ள பொருள்கள்.
18. விழவு அறுபு
அறியா - விழாக்கள் நிற்றலை அறியாத;
என்றும் விழாவுடையது என்றபடி (பதிற். 29
: 7, 30 : 20). இமிழ்
- ஒலிக்கின்ற.
19. பலவகைக்
கொடிகளின் நிழலில் அமைந்த பொன்னை
மிகுதியாக உடைய கடைவீதியின்கண். கொடிகள் இன்ன பொருளை
விற்குமிடம் என்பதை அறிவுறுத்துவதற்குக் கட்டப்படுவன (மதுரைக்.
365 - 6; பட்டினப். 167 - 8, சிலப்.
14 : 216)
21. பரிசிலர்
வெறுக்கை - பரிசில் பெற வருவாருடைய
செல்வமாக இருப்பவனே; "அந்தணர் வெறுக்கை" (முருகு.
.263)
22 - 3. தார்
- கழுத்தில் அணிந்த மாலை (பெருங்.
.2. 2 : 197) எழிலிய அழகுபெற்ற (புறநா.
68 : 5). தொடி சிதை
மருப்பின் - பகைவரது மதிற்கதவத்தைப் பாய்ந்து அழித்தமையாலே
பூண் சிதைந்த கொம்பையுடைய; "கடிமதிற் கதவம் பாய்தலிற்
றொடிபிளந்து, நுதிமுக மழுகிய மண்ணைவெண் கோட்டுச், சிறுகண்
யானை" (அகநா. 24 : 11 - 3)
24. இவ்வுலகத்தோர்
வாழும்பொருட்டு நீ வாழ்வாயாக.
25 -
6. கள்ளையுண்டமையால் சொல் தடுமாறிய மழலை
வார்த்தையைப் பேசும் நாவையும், மெல்லிய சொல்லையும், இசைக்
கருவிகளைக் கொண்ட பையையுமுடைய பாணர் முதலியோர்,
குற்றமற்றுத் திருந்திய நரப்புக் கட்டுக்களையுடைய யாழின்
இசையோடு வாழ்த்துக்கூற. உண்டு உரை மாறுதல்: "உண்டுமகிழ்
தட்ட மழலை நாவிற், பழஞ் செருக்காளர்" (மதுரைக்.
668 - 9).
கலம் - யாழ் முதலியன. தொடை : இங்கே யாழ்; ஆகுபெயர்.
27. வெய்துறவு
- துன்பமுறுதலை. நந்திய - பெருகிய.
28. சுற்றமொடு
- உறவினர்களோடு.
29. ஒன்று
மொழிந்து - உண்மையையே சொல்லி. அடங்கிய
கொள்கை - ஐம்புலன்களும் அடங்கிய கோட்பாட்டினையுடைய;
இது புரையோருக்கு அடை (புறநா. 191 : 6 -
7)
30 -
31. இவனது செங்கோற் சிறப்பால் அவ்வூரை விட்டுச்
செல்லாது தங்கித் தவத்தாலாய நுகர்ச்சியைப் பெற்று நரகத்
துன்பத்தினின்றும் நீங்கிய, இவன் நாட்டிலேயே வாழவேண்டுமென்னும்
விருப்பத்தையுடைய மேலோர்; பெருங். 1. 40 : 386 - 8 ம்
அடிகளிலும் இக்கருத்து வந்துள்ளது.
32. மேயினர்
- விரும்பி. உறையும் (32) நாடு (34) எனக்
கூட்டுக.
33. புறந்
தருதலின் - பாதுகாத்தலினால்.
34. யாணர்
- புது வருவாயையுடைய.
35. மண்ணுடை
ஞாலம் - மண் அணுக்கள் செறிதலையுடைய
பூமி. (புறநா. 2 : 1). எஞ்சாது - குறையாமல்.
36. கொடுத்து
நீங்காத கையினிடத்துள்ள மிக்க
வன்மையினாலே. கைக்குத் துப்பாவது ஈகை. 38. ஏமம் - இன்பம்.
39 -
40. திருமாலைப் போன்ற, நல்லபுகழ் அழியாத
வன்மையை யுடையோய். புகழுக்குத் திருமாலை உவமை கூறுதல், "புகழொத் தீயேயிகழுந ரடுநனை"
(புறநா. 56 : 13) என்பதனாலும் அதன் அடிக்குறிப்பாலும்,
"உரைசால் சிறப்பி னெடியோன்" (சிலப்.
22 : 60) என்பதனாலும் உணரலாகும்.
மு.
"யாண்டுதலைப் பெயர" என்னும் பதிற்றுப்பத்தும் அழிவு
கூறிய இடம் அடுத்தூர்ந்தட்ட கொற்றத்தின் பாற்படும் (தொல்.
புறத். 8, ந.)
(பி - ம்) 5. கழங்குவழி. 8. கவினிழந்த
10. பீர்வாய் பரந்த. (5)
1நிரைய
நரகம்.
2வேயப்பட்ட
வீடுகளையுடைய ஊர்.
3மென்சொல்
: இசைவல்லோரது மொழியும் மென்மையாக
இருக்கும்; "மென்மொழி மேவல ரின்னரம் புளர" (முருகு.
142)
4புரையென்பது
உயர்வைக்குறிப்பதாதலின் புரைவயின்
என்பதற்கு உயர்ந்த தேவாலயங்கள் என்று பொருளுரைத்தார்.
|