17. |
புரைவது
நினைப்பிற் புரைவதோ வின்றே
பெரிய தப்புந ராயினும் பகைவர்
பணிந்துதிறை பகரக் கொள்ளுநை யாதலிற்
றுளங்குபிசி ருடைய மாக்கட னீக்கிக் |
5 |
கடம்பறுத்
தியற்றிய வலம்படு
வியன்பணை
ஆடுநர் பெயர்ந்துவந் தரும்பலி தூஉய்க்
கடிப்புக் கண்ணுறூஉந் தொடித்தோ ளியவர்
அரணங் காணாது மாதிரந் துழைஇய
நனந்தலைப் பைஞ்ஞிலம் வருகவிந் நிழலென |
10 |
ஞாயிறு
புகன்ற தீதுதீர் சிறப்பின்
அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக்
கடுங்கால் கொட்கு நன்பெரும் பரப்பின்
விசும்புதோய் வெண்குடை நுவலும்
பசும்பூண் மார்ப பாடினி வேந்தே. |
இதுவுமது.பெயர்
- வலம்படு வியன்பணை (5)
(ப
- ரை)
5.
வலம்படு வியன்பணையென்றது 1போர் செய்து வருந்தாமற் பகைவர் வெருவியோட
முழங்கி அரசனுக்கு வென்றி
தன்பாலே படநின்ற முரசமென்றவாறு.
இச்சிறப்பான்
இதற்கு, 'வலம்படு வியன்பணை' என்று
பெயராயிற்று.
6.
ஆடுநரென்றது 2வினையெச்சமுற்று வினைத்திரிசொல்.
அமிழ்து திகழ் மழையென முடிக்க.
3அமிழ்தென்றது
நீர். தலைஇயென்பதனைத் தலையவெனத் திரிக்க.
13.
வெண்குடைநுவலுமென்றது வெண்குடையின்
4அருட்சிறப்பைச் சொல்லுமென்றவாறு.
13-4.
நுவலும் மார்பவென முடிக்க.
இஃது 4ஏதுப்பெயர்.
வியன்பணையைக்
(5) கடிப்பைக் கண்ணுறும் இயவர் (7),
'அரணங் காணாது மாதிரந் துழைஇய (8) பைஞ்ஞிலம்
இந்நிழற்கண்ணே வருக' எனச் சொல்லி (9) வெண்குடையின்
அருட்சிறப்பைச் சொல்லுதற்குக் காரணமாய்நின்ற (13)
பசும்பூண்மார்ப, பாடினிவேந்தே (14), நினக்குப் புரைவது நினைப்பிற்
(1) பகைவர் பெரிய தப்புநராயினும் (2) பணிந்து திரைபகரக்
கொள்ளுநையாதலின், (3), புரைவதோ வின்று (1) என மாறிக்கூட்டி
வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது பொறையுடைமையொடு படுத்து அவன்
வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. புரைவது நினைப்பின் - நின்னைப்
பொறுமையினால் ஒப்பதாகிய பொருளை ஆலோசித்தால். 'புரைவது
இன்று - அங்ஙனம் ஒப்பாம் பொருள் யாண்டும் இல்லை.
2-3 பகைவர்:
எழுவாய். பெரிய தப்புநராயினும் -
பெரியனவாகிய பிழைகளைச் செய்தனரேனும். திறை பகர - நினக்குத்
திறையை வெளிப்படையாக அளிக்க. கொள்ளுநை - நின் சினம் மாறி
அத்திறைகளை ஏற்றுக் கொள்ளுவாய்.
1-3.
பெரும்பிழை செய்த பகைவராயினும் அவர் தன்னைப்
பணியும் காலத்து அவர் பிழையை மறந்து ஒழுகுபவனென்ற படி:
"இணரெரி தோய்வன்ன வின்னா செயினும். புணரின் வெகுளாமை
நன்று" (குறள், 308)
4-5.
பிசிர் உடைய - துளித்துளியாகச் சிதறும்படி (பதிற்.
11 : 1) கடம்பு சேரனது பகைவருக்குரிய காவல்மரம். கடலரணிடையே
இருந்த பகைவராதலின் கடலை நீக்கிச் சென்று அம்மரத்தை
அறுத்தனன்: நீக்கி - கடந்து. வலம் - வெற்றி. சேரன் கடல்கடந்து
சென்று கடம்பறுத்த செய்தி, "இருமுந்நீர்த்
துருத்தியுள்.......நெடுஞ்சேரலாதன் (பதிற்.
20 : 2 - 5), "வலம்படு
முரசிற் சேர லாதன், முந்நீ ரோட்டிக் கடம்பறுத்து", சால்பொருந்
தானைச் சேரலாதன், மால்கட லோட்டிக் கடம்பறுத் தியற்றிய,
பண்ணமை முரசு" (அகநா. 127 : 3-4, 347
: 4-6), "கடற்கடம்பெறிந்த
காவலன்" (சிலப். 23 : 81) என்பவற்றாலும்
உணரப்படும்.
பகைவரது
காவல்மரத்தால் முரசு செய்தல்: பதிற்.
11 : 12-4,
குறிப்புரை. வலம்படுபணை: புறநா. 304 : 9.
5-7 பணைக்குப்
பலிதூவி. ஆடுநர் - ஆடுவாராகி. பலி - மலர்
முதலிய பூசைக்குரிய பொருள்கள்; "உருவச் செந்தினை குருதியொடு
தூஉய்,
மண்ணுறு
முரசங் கண்பெயர்த்து" (பதிற். 19 : 6-7)
எனப்
பின்னரும் வருதல் காண்க. முரசைப் பூசித்தல் : "கோற்றொழில்
வேந்தன் கொற்ற முரசம், பெரும்பணைக் கொட்டிலு
ளரும்பலியோச்சி" (பெருங். 2. 2:29-30).
கடிப்பு-முரசை அடிக்கும்
குறுந்தடி. அதனைக் கண்ணுற்றது எடுத்து அடிப்பதற்கு. இயவர்
இங்ஙனம் செய்தல் 19-ஆம் பாட்டாற் புலப்படும். இயவர்-அதனை
அடித்தற்குரிய வள்ளுவர்; எழுவாய். ஆடுவாராகிப் பணைக்கப்
பலி தூவிக் கடிப்பைக் கண்ணுற்றுப் பின்வருவனவற்றைக் கூறினர்.
8-9.
இயவர் கூற்று. அரணம் - பாதுகாப்பு. மாதிரம் துழைஇய
- திசைகளெல்லாம் சென்று தேடிய. நனந்தலைப் பைஞ்ஞிலம் -
விரிந்த இடமாகிய உலகிலுள்ள மக்கட்டொகுதி. இந்நிழலென்றது
சேரலாதன் குடை நிழலை. என (9), நுவலும் (12) என்று முடிக்க.
10-13.
ஞாயிறு புகன்ற விசும்பு; தீதுதீர் சிறப்பின் விசும்பு;
புகன்ற - விரும்பிய. அமிழ்து - நீர். கருவிய - நீர் முதலிய
தொகுதியை உடைய. கணமழை - மேகக்கூட்டம். தலைஇ - பெய்ய;
எச்சத்திரிபு. கடுங்கால் கொட்கும் - வேகமாகிய காற்றுச்சுழன்று
அடிக்கும். ஞாயிறு புகலுதல் முதலியன விசும்புக்கு அடை.
ஞாயிற்றின் வெயிலாலும், மேகத்தின் மழையாலும், காற்றின்
வேகத்தாலும் தடையுறாது நின்று பாதுகாக்கும் குடையென்பது
குறிப்பு. நுவலும் - புகழும். இயவர் (7) நுவலும் என்க.
14. பசும்பூண்
- பசும்பொன்னாலாகிய பதக்கம். பாடினி வேந்து:
பதிற் 14 : 17, குறிப்புரை.
தன்பாற்
புக்கோரைப் பாதுகாக்கும் அறிவுடையானென்பதை
அவன் இயல்பாகவும் அவனது குடையின் இயல்பாகவும் கூறிப்
பாராட்டியவாறு.
(பி
- ம்) 1. புரைவதோ வன்றே 9. பஞ்ஞிலம் (7)
1"வலனிரங்கு
முரசு" (பரி. 7 : 6) என்பதற்கு, 'வெற்றியுண்டாக ஒலிக்கும் முரசு' எனப் பரிமேலழகர்
எழுதிய உரை இங்கே ஒப்பு நோக்குதற்குரியது.
2"வானின்
றுலகம் வழங்கி வருதலாற், றானமிழ்த மென்றுணரற் பாற்று" (குறள்.
11) என்பது இங்கே நினைத்தற்குரியது.
3உலகத்திலுள்ளார்
யாராயினும் தன் நிழற்கீழ் வரின்
பாதுகாக்கும் தன்மையாதலின் 'தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேற்
செல்வதாய' (குறள். 757,
பரிமேல்.) அருளுடையதாயிற்று.
சேரலாதனது அருளைக் குடைமேலேற்றியது இலக்கணை.
4ஏதுப்பெயரென்றது
மார்ப என்பதை. ஏதுப்பெயர் - காரணப்
பெயர். நுவலுமென்னும் எச்சம் மார்பவென்பதைக் கொண்டு முடிந்தது.
நுவலுதற்குக் காரணமாகிய மார்பவென்னும் பொருள்படுதலின் இங்கே
நுவலும் வினைக்கு அப்பெயர்ப் பொருள் ஏதுவாயிற்று. தன்னை
அடைந்தோரைக் காத்தற்கு மார்பின் வலி காரணமாயிற்று; "மண்டமர் கடந்தநின் வென்றா
டகலத்துப், பரிசிலர்த் தாங்கு முருகெழு
நெடுவேஎள்" (முருகு. 272
- 3), 'கொடுக்கும் பொருள் மார்பின்
வலியான் உளதாமாகலின், அகல நோக்கின வென்றதாகக் கொள்க'
(புறநா. 155 :
9. உரை) என்பவற்றையும் காண்க.
|