78.
|
வலம்படு
முரசி னிலங்குவன விழூஉம்
அவ்வெள் ளருவி யுவ்வரை யதுவே
சில்வளை விறலி செல்குவை யாயின்
வள்ளிதழ்த் தாமரை நெய்தலொ டரிந்து |
5
|
மெல்லியன்
மகளி ரொய்குவன ரியலிக்
கிளிகடி மேவலர் புறவுதொறு நுவலப்
பல்பய னிலைஇய கடறுடை வைப்பின்
வெல்போ ராடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயி லிறும்பிற் றகடூர் நூறி |
10
|
பேஎ
மன்ற பிறழநோக் கியவர்
ஓடுறு கடுமுரண் டுமியச் சென்று
வெம்முனை தபுத்த காலைத் தந்நாட்
டியாடுபரந் தன்ன மாவின்
ஆபரந் தன்ன யானையோன் குன்றே. |
துறை
- விறலி யாற்றுப்படை. வண்ணமும் தூக்கும்
அது.பெயர் - பிறழநோக் கியவர் (10)
(ப
- ரை) 2.
அவ்வெள்ளருவி - அழகிய வெள்ளருவி.
உவ்வரை யென்றது உவ்வெல்லையென்றவாறு. அதுவென்பது
அம்மலை யென்னுஞ் சுட்டு. வெள்ளருவியையுடைய அதுவெனக்
கூட்டுக.
மகளிர்
இயலி (5) நெய்தலொடு தாமரையரிந்து (4) கிளிகடி
மேவலர் புறவுதொறும் நுவலப் (6) பல்பயன் நிலைஇய கடறு (7)
எனக்கூட்டி, கிளிகடி மகளிர் நில அணுமையானே மருதநிலத்திலே
சென்று நெய்தலொடு தாமரையரிந்து பின் கிளிகடி தொழிலை
மேவுதலையுடையராய்ப் புறவின் புனங்கள்தோறும் கிளிகடி பாடலை
நுவலப் பல்பயங்களும் நிலை பெற்ற முல்லை நிலமென உரைக்க.
வைப்பிற்
(7) றகடூர் (9) எனக் கூட்டுக.
ஆடவர்காக்கும்
(8) இறும்பு (9) எனக் கூட்டுக.
9.
வில்பயில் இறும்பு - படைநிலை.
10.
பிறழநோக்கியவரென்றது தம் சினமிகுதியானே மாற்றார்
படைத் தோற்றத்தினை நெறியால் நோக்காது எடுத்தும் படுத்தும்
1கோட்டியும் பலபடப் பிறழநோக்கும் பகைவராகிய பல்லியமுடைய
ரென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு, 'பிறழநோக்கியவர்' என்று
பெயராயிற்று.
மாவினொடு
(13) வென ஒடு விரித்து, முனைதபுத்த காலை
மாவினொடு (12) ஆபரந்தன்ன யானையோன் (14) எனவுரைக்க.
சில்வளைவிறலி,
செல்குவையாயின், (3), யானையோன் குன்று
(14) உவ்வெல்லையில் வெள்ளருவியுடைய அது என மாறிக் கூட்டி
வினை முடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1-3.
சிலவாகிய வளையை அணிந்த விறலி, நீ
சேரன் பாற் செல்வாயாயின், வெற்றியுண்டாகின்ற முரசொலியைப்
போல ஓசை விளங்குவனவாகி மலையினின்றும் கீழே விழும் அழகிய
வெள்ளிய அருவிகளையுடைய உவ்வெல்லையிடத்தேயுள்ளது.
சில்வளை
விறலி: பதிற். 40 : 21, 57 : 6.
4-5.
மென்மையான இயல்பையுடைய மகளிர் அசைந்துசென்று
நடந்து மருதநிலத்தேயுள்ள வளவிய இதழ்களையுடைய தாமரைப்பூவை
நெய்தற்பூவோடு அறுத்து.
மகளிர்
இயலி அரிந்து என மாற்றிப் பொருள்கொள்க.
6.
காட்டிற் புனத்தினிடத்தே கிளியைக்கடிதலை
விரும்புதலையுடையராகி அதற்குரிய பாட்டைப்பாட. 4 - 6.
இவ்வடிகளால் மருதமும் முல்லையும் கலந்திருத்தல் கூறப்பட்டது.
7.
பல பயன்களும் நிலைபெற்ற முல்லைநிலத்தின்
ஊர்களையுடைய.
8-9.
வெல்லும் போரைச் செய்யும் வீரர் மறத்தை விரும்பிப்
பாதுகாக்கும், விற்படைகள் நிலைபெற்ற காவற்காட்டையுடைய
தகடூரை அழித்து. ஆடவர் காக்கும் இறும்பு: பு. வெ..
63.
10.
தெளிவாக, தம்பகைவர் படைத்தோற்றத்தை நேரே
நோக்காமல் எடுத்தும் படுத்தும் வளைத்தும் பலபட மாறுபட
நோக்கும் அச்சத்தையுடைய பார்வையையும் வாத்தியங்களையும்
உடைய பகைவரது.
11.
தம்மோடு எதிர்த்தார் ஓடுதற்குக் காரணமான மிக்க
மாறுபாடு அழியும்படி படையெடுத்துச் சென்று.
12.
கொடிய போரிலே கெடுத்த காலத்தில் தம்முடைய நாட்டில்.
13-4.
ஆடுகள் பரந்தாலொத்த குதிரைகளோடு, பசுக்கள்
பரந்தாலொத்த யானைகளையுடையோனது குன்று; மாவினொடு
என உருபுவிரிக்க.
குன்று
(14) உவ்வரையது (2) என முடிக்க.
(பி
- ம்.) 4. இதட்டாமரை. 9. உறுப்பிற்றகடூர்.
10. பேயமன்ற.
(8)
1கோட்டி
- வளைத்து; தடங்கண் கோட்டித், தோண்முதற்
பசலை தீரத்தோன்றலைப் பருகு வார்போல்" (சீவக.
470) |