நான்காம்
பத்து பதிகம்
|
ஆராத் திருவிற்
சேர லாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் றேவி யீன்ற மகன்முனை
பனிப்பப் பிறந்து பல்புகழ் வளர்த் |
5 |
தூழி னாகிய
வுயர்பெருஞ் சிறப்பிற்
பூழி நாட்டைப் படையெடுத்துத் தழீஇ
உருள் பூங் கடம்பின் பெருவாயி னன்னனை
நிலைச்செருவி னாற்றலை யறுத்தவன்
பொன்படு வாகை முழுமுத றடிந்து |
10 |
குருதிச் செம்புனல்
குஞ்சர மீர்ப்பச்
செருப்பல செய்து செங்களம் வேட்டுத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றிக் |
களங்காய்க்கண்ணி
நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்: கமழ்குரற்றுழாய், கழையமல்கழனி, வரம்பில்
வெள்ளம், ஒண்பொறிக்கழற்கால், மெய்யாடுபறந்தலை, வாண்மயங்கு கடுந்தார், வலம்படுவென்றி,
பரிசிலர்வெறுக்கை, ஏவல் வியன்பணை, நாடுகாணவிர்சுடர். இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு
கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகங்கொடுத்தான் அக்கோ.
களங்காய்க்கண்ணி
நார்முடிச்சேரல் இருபத்தையாண்டு
வீற்றிருதான்.
(கு
- ரை) 1. ஆராத்திருவின் - நுகர நுகர விருப்பம்
அமையாத செல்வத்தையுடைய.
3-4.
முனைபனிப்பப் பிறந்து - பகைவர் போர்முனைகள்
நடுங்கும்படி பிறந்து.
5. ஊழின்
ஆகிய - முறைமையினால் உண்டான.
6. பூழிநாடு:
கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று;
இதனை வென்றமையால் சேரர், "பூழியர் மெய்ம்மறை" (பதிற்.
73 : 11, 90 : 27), "பூழியர் கோ" பதிற்.
(21 : 23, 84 : 6) என்று
கூறப்படுவர்.தழீஇ - தன் நாட்டோடு சேர்த்துக்கொண்டு.
7. உருள்
பூங்கடம்பு - தேருருள் போன்ற பூவையுடைய கடம்பு
(முருகு, 11, ந.; பரி.
5 : 81, 21 : 11, 50)
7-8.
"குடாஅ, திரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற்
பொலம்பூ ணன்னன் பொருதுகளத் தொழிய, வலம்படு கொற்றந் தந்த
வாய்வாட், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்" (199 : 18 - 22)
என அகநானூறு வாகைப்பறந்தலையில் வென்றதாகக் கூறும்.
9. வாகை
நன்னனது காவல்மரம் (பதிற். 40 : 14 -
5)
10. இரத்தமாகிய
செந்நிறத்தையுடைய புனல் யானைகளை
இழுத்துச் செல்ல.
11. செங்களம்
வேட்டு - இரத்தத்தாற் சிவந்த போர்க்களத்தில்
களவேள்வியைச் செய்து; களம் வேட்டல்: முருகு.
99 - 100; மதுரைக்
128 - 30; புறநா. 26 : 6 - 11;
பு. வெ. 160.
|