ஏழாம்
பத்து பதிகம்
|
மடியா
வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி யந்துவற் கொருதந்தை
ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி யீன்றமகன்
நாடுபதி படுத்து நண்ணா ரோட்டி |
5
| வெருவரு
தானை கொடுசெருப் பலகடந் தேத்தல் சான்ற விடனுடை வேள்வி ஆக்கிய பொழுதி னறத்துறை
போகி மாய வண்ணனை மனனுறப் பெற்றவற் கோத்திர நெல்லி னொகந்தூ ரீத்துப் | 10
| புரோசு
மயக்கி மல்ல லுள்ளமொடு மாசற விளங்கிய |
செல்வக்கடுங்கோ
வாழியாதனைக் கபிலர் பாடினார்
பத்துப்பாட்டு. அவைதாம்: புலாஅம்பாசறை, வரைபோலிஞ்சி,
அருவியாம்பல், உரைசால் வேள்வி, நாண்மகிழிருக்கை, புதல்சூழ் பறவை, வெண் போழ்க்கண்ணி,
ஏமவாழ்க்கை, மண்கெழுஞாலம்,
பறைக்குரலருவி, இவை பாட்டின் பதிகம்.
பாடிப்
பெற்ற பரிசில்: 1சிறுபுறமென நூறாயிரங்காணம்
கொடுத்து 2நன்றாவென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட
நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ.
செல்வக்
கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு
வீற்றிருந்தான்.
(கு
- ரை) 1. சோம்பியிராத ஊக்கத்தால் பகைவரைத்
தன்னோடு சேர்த்த; உள்ளம் - ஊக்கம்; "உள்ள முடைமை யுடைமை"
(குறள், 592, பரிமேல்.).
2. நீண்ட நுண்ணியவான நூற்பொருளைக்
கேட்டலுடைய; நுண் கேள்வி: கேட்கப்படுகின்ற பொருளினது
நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது (குறள்.
419, பரிமேல்.)
4.
நாடுகளில் ஊர்களை உண்டாக்கிப் பகைவரை ஓடச் செய்து.
5.
பகைவர் அஞ்சத்தக்க சேனையால், பல போர்களை
வஞ்சியாமல் எதிர்நின்று வென்று.
6-7.
புகழ்தலமைந்த செல்வத்தையுடைய வேள்விகளைச் செய்த
பொழுதில் மற்ற அறத்தின் கூறுபாடுகளையும் செய்து முடித்து.
8.
கரிய நிறத்தையுடைய திருமாலைத் தன் மனதிலே மிகப்
பெற்று.
8-9.
அத்தெய்வத்திற்கு அக்கினிகோத்திரத்திற்குரிய நெல்லின்
விளைவையுடைய ஒகந்தூரென்னும் ஊரைத் தேவதானமாகக்
கொடுத்து; ஓத்திரநெல் என்றது இராசான்னமென்னும் நெல்லை;
'பறவைப் பெயர்ப்படுவத்தம் - பறவையின் பெயரைப் பெறுகின்ற
நெல்லு: என்றது இராசன்ன மென்னும் பெயர் பெறுகின்ற
நெல்லென்றவாறு. ஆகுதி பண்ணுதற்கு இந்த நெல்லுச்சோறே
சிறந்ததென்று இதனைக் கூறினார்; இனி மின்மினி நெல்லென்பாரும்
உளர்; இப்பெயர் வழக்கின்மையும் ஆகுதிக்குச் சிறவாமையும்
உணர்க' (பெரும்பாண். 305, ந.)
என்பது இங்கே அறிதற் பாலது.
10.
தன் புரோகிதனைக் காட்டிலும் தான் அறநெறியிலே
மேம்பட்டு; புரோசு: தொல். கிளவி.
56, சே, ந,
"மெய்யூ
ரிமைச்சியன் மையூர் கிழானைப், புரையறு கேள்விப் புரோசு மயக்கி" (பதிற்.
9-ஆம் பதிகம், 11 - 2)
11. வளத்தையுடைய
மனத்தொடு குற்றமில்லாமல் விளங்கிய.
1சிறுபுறம்
- சிறுகொடை; அறப்புறம் (சீவக.76) என்புழிப்போல.
2பதிற்.
85 : 13.
|