வழங்கும்     பெரும்பாழாகும்;     அவை     அளிய  என்பதாம்;
பழையவுரைகாரர்,   “உரவோ   ரும்பல்,  தோன்றல்,   குட்டுவ,  நீ
சீறினையாதலின், நாடுகெழு தண்பணை அளிய தாம் பெரும்பாழாகும்
எனக்கூட்டி வினைமுடிவு செய்க” என்பர்.

“இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று”.

சீறினை   யாதலின் நாடுகெழு தண்பணை பாழாகு மென எடுத்துச்
செலவினை   மேலிட்டுக்   கூறினமையால்  வஞ்சித்துறைப்  பாடாண்
பாட்டாயிற்று.    உளைப்   பொலிந்த   மா   வென்பது   முதலாய
நான்கடிகளும்   கடிமிளை   யென்பது   முதலாய   இரண்டடிகளும்
வஞ்சியடியாகலின்,    வஞ்சித்தூக்கும்,    ஏனைய    நேரடியாகலின்
செந்தூக்கு   மாகலின்,  இதற்குத்  தூக்கு  வகுத்தோர்  செந்தூக்கும்
வஞ்சித்தூக்கும்  என்றார். புகலென அடியிடையும் ஓடுவென அடியின்
இறுதியும் வந்தன கூன்.

3. ததைந்த காஞ்சி
 

23.அலந்தலை யுன்னத் தங்கவடு பொருந்திச்
சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து
நிலம் பைதற்ற புலங்கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பைய ராங்கண்
 
5மன்றம் போந்து மறுகுசிறை பாடும்
வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப்
பொன்செய் புனையிழை யொலிப்பப் பெரிதுவந்து
நெஞ்சுமலி யுவகைய ருண்டுமலிந் தாடச்
சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும்
 
10போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ
நின்னயந்து வருவேங் கண்டனம் புன்மிக்கு
வழங்குந ரற்றென மருங்குகெடத் தூர்ந்து
பெருங்கவி னழிந்த வாற்ற வேறுபுணர்ந்
தண்ணன் மரையா வமர்ந்தினி துறையும்
 
15விண்ணுயர் வைப்பின காடா யினநின்
மைந்துமலி பெரும்புக ழறியார் மலைந்த
போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின்
மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு
 
20முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற ழடைகரை
நந்து நாரையொடு செவ்வரி யுகளும்