திவவினையுமுடையவாய், வயிரிய மாக்கள் எழீஇ, மன்றம் நண்ணி மறுகு சிறைபாடும், இப்பெற்றிப்பட்ட சிறப்பையுடைய அகன்கண் வைப்பின் நாடு இப் பெற்றியெல்லா மிழந்து கண்டார்க்கு அளித்தலையுடைய என வினைமுடிவு செய்க” என்பார். இதனால் குட்டுவனது வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று. வரம்பில் தானை பரவா வூங்கென எடுத்துச் செலவினை மேலிட்டுக் கூறினமையால், இப்பாட்டு வஞ்சித்துறைப் பாடாணாயிற்று. 10. புகன்ற வாயம் |