துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் : தசும்பு துளங்கிருக்கை. 1 - 8. இரும்பனம் புடையல் .......... குட்டுவ. உரை : இரும்பனம் புடையல் - கரிய பனந்தோட்டாலாகிய மாலையும்; ஈகை வான்கழல் - பொன்னாற் செய்த பெரிய வீரக் கழலுமுடையராய் ; மீன்தேர் கொட்பின் - மீனைப் பிடிக்கும் சூழ்ச்சியால்; சிரல் பனிக்கயம் மூழ்கிப் பெயர்ந்தன்ன - சிரற்பறவை குளிர்ந்த குளத்துட்
1.சேர்ந்தோ ரல்லதென்றும் பாடம். |