இனிப்     பழையவுரைகாரர்,   “ஆரெயில்   தோட்டி  வௌவி,
அதனையுடைய  கழுவுள் தலைமடங்குகையாலே வேறு புலம் படர்ந்து,
அவ்வேறு  புலத்து நினக்கு யானையொடு அருங்கலம் திறையிடார்தம்
விருந்தின்  வாழ்க்கையொடு  பெருந்திரு வற்றதெனக் கருதித் தங்கள்
மெய்ந்நடுக்கமிக்கு    நின்னை   அணங்கெனக்   கருதிப்   பலபடப்
பரவுதலான்,  பேய்  தான்  பற்றினாருயிரை வௌவாது தனக்கு அவர்
பலியிட்டுழி  அப் பலி கொண்டு பெயருமாறுபோல, நீயும் அவருயிரை
வௌவாது   திறை   கொண்டு  பெயரா  நின்றாய்  ;  இஃதன்றே நீ
இதுபொழுது   செய்கின்றது   ;   நின்னை  யுடற்றியோர்  கடுந்தேறு
உறுகிளை   துஞ்சும்  கூடு  கிளைத்த  இளந்துணை  மகாரைப்போல,
பெருமானே  ;  அலந்தார்கள்  ;  இனிமேல்  உள்ளத்து உரவரையும்
மடவரையும் அவரவர் அறிவினைத் தெரிந்ெ்தண்ணி,  அவர்களிடத்துச்
செய்யும் அருளறிந்து அருளாயாயின், நெடுந்தகாய், இவண்  வாழ்பவர்
யார்?  நின்னூழி  வாழ்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க”, என்றும்,
“இதனாற்  சொல்லியது  அவன்  வென்றிச்  சிறப்புக்  கூறி அவற்குப்
பகைவர்மேல் அருள் பிறப்பித்தவாறாயிற்” றென்றும் கூறுவர்.

2. உருத்தெழு வெள்ளம்
 

72.இகல்பெரு மையிற் படைகோ ளஞ்சார்
சூழாது துணித லல்லது வறிதுடன்
காவ லெதிரார் கறுத்தோர் நாடுநின்
முன்றிணை முதல்வர்க் கோம்பி் ருறைந்து
 
5மன்பதை காப்ப வறிவு வலியுறுத்து
நன்றறி யுள்ளத்துச் சான்றோ ரன்னநின்
பண்புநன் கறியார் மடம்பெரு மையின்
துஞ்ச லுறூஉம் பகல்புகு மாலை
நிலம்பொறை யொரா அநீர் ஞெமரவந் தீண்டி
 
10உரவுத்திரை கடுகிய வுருத்தெழு வெள்ளம்
வரையா மாதிரத் திருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட வகன்றுவரு கூட்டத்
தஞ்சாறு புரையு நின்றொழி லொழித்துச்
செஞ்சுடர் நிகழ்விற் பொங்குபிசிர் நுடக்கிய
 
15மடங்கற் றீயி னனையை
சினங்கெழு குருசினின் னுடற்றிசி னோர்க்கே.
 

துறை  : செந்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணம்  : ஒழுகுவண்ணம்.
தூக்கு : செந்தூக்கு.
பெயர்  : உருத்தெழுவெள்ளம்.