இதுகாறும்  கூறியவாற்றால், “சில்வளை விறலி, செல்குவையாயின்
யானையோன் குன்று  உவ்வெல்லையில் வெள்ளருவியையுடைய அது
என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க”.

இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பு கூறியவாறாயிற்று.

9. நிறம்படு குருதி
 
 

79.உயிர்போற் றலையே செருவத் தானே
கொடைபோற் றலையே யிரவலர் நடுவண்
பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தி
நின்வயிற் பிரிந்த நல்லிசை கனவினும்
  
5பிறர்நசை யறியா வயங்குசெந் நாவின்
படியோர்த் தேய்த்த வாண்மைத் தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப
அனைய வளப்பருங் குரையை யதனால்
நின்னொடு வாரார் தந்நிலத் தொழிந்து
  
10கொல்களிற் றியானை யெருத்தம் புல்லென
வில்குலை யறுத்துக் கோலின் வாரா
வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்தவர்
அரசுவா வழைப்பக் கோடறுத் தியற்றிய
அணங்குடை மரபிற் கட்டின்மே லிருந்து
 
15தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து
நிறம்படு குருதி புறம்படி னல்லது
மடையெதிர் கொள்ளா வஞ்சுவரு மரபிற்
கடவு ளயிரையி னிலைஇக்
கேடில வாக பெருமநின் புகழே.
 

துறை : செந்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : நிறம்படுகுருதி.

1 - 8. உயிர் ............. குரையை.   

உரை :  வயங்கு செந் நாவின் - மெய்ம்மைமொழியால் விளக்கம்
பொருந்திய  செவ்விய நாவினையும் ; படியோர் தேயத்த ஆண்மை -
வணங்காதாரை   வலியழித்த   ஆண்மையினையும்   ;  தொடயோர்
தோளிடைக்   குழைந்த  கோதை  மார்ப  -  தொடியணிந்த  மகளிர்
தோளைக் கூடுதலால்