1. நிழல்விடு கட்டி |
81. | உலகம் புரக்கு முருகெழு சிறப்பின் வண்ணக் கருவிய வளங்கெழு கமஞ்சூல் அகலிரு விசும்பி னதிர்சினஞ் சிறந்து கடுஞ்சிலை கழறி விசும்படையூ நிவந்து |
5 | காலை யிசைக்கும் பொழுதொடு புலம்புகொளக் களிறுபாய்ந் தியலக் கடுமா தாங்க ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப அரசுபுறத் திறுப்பினு மதிர்விலர் திரிந்து வாயில் கொள்ளா மைந்தினர் வயவர் |
10 | மாயிருங் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத் தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும் முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக் கெடாஅ நல்லிசைத் தங்குடி நிறுமார் இடாஅ வேணி வியலறைக் கொட்ப |
15 | நாடடிப் படுத்தலிற் கொள்ளை மாற்றி அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி கட்டறை வலிப்ப நின்தானை யுதவி வேறுபுலத் திறுத்த வெல்போ ரண்ணல் முழவி னமைந்த பெரும்பழ மிசைந்து |
20 | சாறயர்ந் தன்ன காரணி யாணர்த் தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்திக் காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர் கலிமகிழ் மேவல ரிரவலர்க் கீயும் சுரும்பார் சோலைப் பெரும்பெயர்க் கொல்லிப் |
25 | பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை யாயத்துத் தன்னிறங் கரந்த வண்டுபடு கதுப்பின் ஒடுங்கீ ரோதி யொண்ணுத லணிகொளக் கொடுங்குழைக் கமர்த்த நோக்கி யைவரப் |
30 | பெருந்தகைக் கமர்ந்த மென்சொற் றிருமுகத்து மாணிழை யரிவை காணிய வொருநாட் பூண்க மாளநி்ன் புரவி நெடுந்தேர் முனைகை விட்டு முன்னிலைச் ெ்சல்லாது |