இதுகாறும்     கூறியது : வானம் தளி சொரிந்தெனச் சில்லேராளர்
பகன்றைத்  தெரியல்  கலிங்கம்  கடுப்பச்  சூடித் திருமணி பெறூஉம்
அகன்கண்   வைப்பின்   நாடு   கிழவோய்,   பெருஞ்சமம்  ததைய
எஃகுயர்த்து,   மன்னர்   துதைநிலை   கொன்று,  அருந்துறைபோகி,
பண்ணிய  விலைஞர்போலப் பெருங்கைத் தொழுதியின் புண்ணொரீஇ
வன்றுயர் கழிப்பி, இரந்தோர் வாழ நல்கி, இரப்போர்க்கு ஈதல் தண்டா
மாசிதறிருக்கை    கண்டனென்   செல்கு   வந்தனென்   என்பதாம்.
பழையவுரைகாரர்,  “நாடு  கிழவோய்,  மன்னர்  பெருஞ்சமம் ததைய
எஃகுயர்த்து   அம்மன்னர்   பலர்  கூடிச்  செறிந்த  நிலைமையைக்
கொன்று  அருந்துறை போகிக் கடலை நீந்தின மரக்கலத்தினை அறிவு
சேராது  வலியுறுக்கும்  பண்டவாணிகரைப்போலக்  கைத்தொழுதியின்
புண்ணை   ஒருவுவித்து   வலிய   துயரைக்   கழித்துப் போரிடத்து
வினையிலிருத்தலே  விநோதமாகக்கொண்டு  இரந்தோர் வாழ நல்கிப்
பின்னும் இரப்போர்க்கு ஈதலின் மாறாத மா சித றிருக்கையைக் கண்டு
போவேன் வந்தேன் எனக் கூட்டி வினை முடிவு செய்க” என்பர்.

“இதனாற் சொல்லியது   : அவன்  வென்றிச்  சிறப்பும்  கொடைச்
சிறப்பும் கூறியவாறாம்.”

7. வென்றாடு துணங்கை
 

77.எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறையன்
என்றனி ராயி னாறுசொல் வம்பலிர்
மன்பதை பெயர வரசுகளத் தொழியக்
கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை
 
5மீபிணத் துருண்ட தேயா வாழியிற்
பண்ணமை தேரு மாவு மாக்களும்
எண்ணற் கருமையி னெண்ணின்றோ விலனே
கந்துகோ ளீயாது காழ்பல முருக்கி
உகக்கும் பருந்தி னிலத்துநிழல் சாடிச்
 
10சேண்பரண் முரம்பி னீர்ம்படைக் கொங்கர்
ஆபரந் தன்னபல் செலவின்
யானைகாண் பலவன் றானை யானே .
 

துறை : உழிஞை யரவம்.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : வென்றாடு துணங்கை.

1 - 2. எனைப்பெரும் படையனோ.......................வம்பலிர். 

உரை :  ஆறு   செல்   வம்பலிர்   -   இவ்வழியே   செல்லும்
புதுவோர்களே;  சினப் போர்ப் பொறையன் - சினத்துடன் போரை