வெள்ளம்     கால் வழங் காரெயிலெனச் சொல்லப்பட்ட நின்  படை,
போர்செய்யக்    கருதின்    நின்னொடு    போரெதிர்ந்த   வேந்தர்
பொரமாட்டாது  நின்னை  நீங்குவர்;  இஃது அதுவென வினை முடிவு
செய்க”  என்றும் இதனால் அவன் வென்றிச் சிறப்புக்  கூறியவாறாயிற்
றென்றும் கூறுவர்.
  

“வரம்பில் வெள்ளம் கருதி னென எடுத்துச் செலவினை மேலிட்டுக்
கூறினமையான்,    வஞ்சித்துறைப்   பாடாண்   பாட்டாயிற்று.    கடி
மரத்தானென்றது   முதலாக  மூன்றடி  வஞ்சியடியாக   வந்தமையான்
வஞ்சித்தூக்கு மாயிற்று.”
  

4. ஒண்பொறிக் கழற்கால்
 

34.ஒரூஉப நின்னை யொருபெரு வேந்தே
ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால்
இருநிலந் தோயும் விரிநூ லறுவையர்
செவ்வுளைய மாவூர்ந்து
 
5நெடுங்கொடிய தேர்மிசையும்
ஓடை விளங்கு முருகெழு புகர்நுதற்
பொன்னணி யானை முரண்சே ரெருத்தினும்
மன்னிலத் தமைந்த . . . . . . . .
மாறா மைந்தர் மாறுநிலை தேய
 
10முரைசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழ
அரைசு படக் கடக்கு மாற்றற்
புரைசான் மைந்தநீ யோம்பன் மாறே.
 
  

துறை : தும்பை யரவம்.
வண்ணமும் தூக்கு மது.
பெயர் : ஒண்பொறிக் கழற்கால். 

1 - 3. ஒரூஉப...................அறுவையர். 

உரை : ஒரு பெரு வேந்தே - ஒப்பற்ற பெரிய வேந்தே;   ஓடாப்
பூட்கை  -  போரிற்  புறங் கொடாத கோட்பாட்டையும்; ஒண் பொறிக்
கழற்கால்  -  ஒள்ளிய  பொறிகள் பொறித்துள்ள வீரகண்டை யணிந்த
கால்களையும்;   இரு  நிலம்  தோயும்  -  பெரிய  நிலம்  வரையில்
தொங்குகின்ற;  விரி  நூல்  அறுவையர்  -  விரிந்த நூலான் இயன்ற
ஆடையினையுமுடைய  பகைவர்; நின்னை ஒரூஉப - நின்னை அஞ்சி
நீங்குவர் காண் எ - று.
  

பிறர்துணை  வேண்டாதே  தானே  தன்     படையைக்கொண்டு
சென்று தன்னைப் போரில்    எதிர்ந்தவரைப்   பொருது    வென்றி
யெய்தும்