அறம்புரி     செங்கோலனாகிய   சேரலாதன்   நாட்டில்   மழை
பொய்க்குவதின்மை   தோன்ற,   “பொய்க்குவ  தாயினும்”   என்றும்,
நச்சியடைந்தோர்   நசை   பழுதாகாது  நச்சியவாறே  நல்கும்  நலம்
தோன்ற, “நசை பொய்யலன்” என்றும் கூறினார்.
  

பாண்  மக்கள், கள் உண்மின்; அடுமின்; எறிக; ஏற்றுமின்; கூந்தல்
விறலியர்   அடுப்பு   வழங்குக;   பெற்றது   உதவுமின்;  தப்பின்று;
சேரலாதன்,  மாரி  பொய்க்குவதாயினும்,  பின்னும் நசை பொய்யலன்
என்று வினைமுடிவு செய்க.
  

சேரலாதனது   கொடைச் சிறப்பையே எடுத்தோதினமையின், இஃது
இயன்மொழி     வாழ்த்தாயிற்று.   அடிபிறழாது   அளவடியானியன்ற
நேரிசையாசிரியப்பா வாகலின்,  ஒழுகுவண்ணமும் செந்தூக்கு மாயிற்று.
  

9. வளனறு பைதிரம்
 

19.கொள்ளை வல்சிக் கவர்காற் கூளியர்
கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரனறுப்ப
ஒண்பொறிக் கழற்கால் மாறா வயவர்
திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்ப
 
5செங்கள விருப்பொடு கூல முற்றிய
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர்
கடிப்புடை வலத்தர் தொடித்தோ ளோச்ச
வம்புகளை வறியாச் சுற்றமொ டம்புதெரிந்து
 
10அவ்வினை மேவலை யாகலின்
எல்லும் நனியிருந் தெல்லிப் பெற்ற
அரிதுபெறு பாயற் சிறுமகி ழானும்
கனவினு ளுறையும் பெருஞ்சால் பொடுங்கிய
நாணுமலி யாக்கை வாணுத லரிவைக்
 
15கியார்கொ லளியை
இனந்தோ டகல வூருட னெழுந்து
நிலங்கண் வாட நாஞ்சில் கடிந்துநீ
வாழ்த லீயா வளனறு பைதிரம்
அன்ன வாயின பழனந் தோறும்
 
20அழன்மலி தாமரை யாம்பலொடு மலர்ந்து
நெல்லின் செருவி னெய்தல் பூப்ப