முடிபு, நின் பகைவர் நாடும் கண்டு வந்தேன்; அதுவேயன்றி, வேந்தே, வெறுக்கை, சேரலாத, நீ புறந்தருதலின் நோயிகந் தொரீஇய நின் நாடும் கண்டு மதிமருண்டேன்; இவையிரண்டும் காணவேண்டின காரணம் யாதெனின், மைந்த நின் பண்பு பலவற்றையும் காண நயந்த நயப்பாகும் என முடிபு செய்க. இதனால் அவன் வென்றிச் சிறப்பும் தன் நாடு காத்தற்சிறப்பும் உடன்கூறியவாறாயிற்று. 6. துயிலின் பாயல் |