காலாள்மேற்     செல்லாது  தாங்குநர்   யானைக்கோடு   துமிக்கும்
எஃகுடை  வலத்தரா யிருப்பர்;அவ்வாறு நீ அழியாது மாறுபாடாற்றிப்
பொருதழிக்கும்வழி  நின்முடிக்கண்ணியை உதிரம் தெறித்தலால் நிறம்
பெயர்தலிற் பருந்து உறுதற் களப்ப, நின் முன்னர் வழங்கும் மாக்கண்
தண்ணுமை  நின்னெதிர் நின்று, மாற்றா ரெய்தலையுடைய அம்பு கண்
கிழித்தலால் ஒலியொழியக் கூற்றம் வலை விரித்தாற் போலக் களத்தில்
எதிர்ந்த  மாற்றார்  படையை  யெல்லாம் ஒன்றாகக் கொல்லக் கருதி
நோக்கின நோக்கினையுடையை ; நெடுந்தகாய் ! இவ்வாறு செருவத்துக்
கடியை என வினை முடிவு செய்க” என்பது பழையவுரை.
  

இதனாற்   சொல்லியது   அவன்    வினோதத்து   மென்மையும்
செருவகத்துக் கடுமையும் உடன் கூறியவாறாயிற்று.
  

தாங்குநர்     தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கு  மென்று
எதிரூன்றினார்  மேற்சேறல் கூறினமையான், இஃது எடுத்துச் செலவின்
மேற்றாய்  வஞ்சித்துறைப்  பாடாணாயிற்று.  ‘அரவழங்கும்”  என்பது
முதலாக  இரண்டு  குறளடியும்,  “பந்த ரந்தரம் வேய்ந்து என வொரு
சிந்தடியும்,  “சுடர்நுத” லென்பது முதலாக இரண்டு குறளடியும் “மழை
தவழும்”  என்பது முதலாக நான்கு குறளடியும் வந்தமையான் வஞ்சித்
தூக்குமாயிற்று. தாங்குநர், என்பது கூன்.
  

2. சிறு செங்குவளை
 

52.கொடி நுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி
அருங்கலந் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கந் திசைதிரிந் தாங்கு
 
5மையணிந் தெழுதரு மாயிரும் பஃறோல்
மெய்புதை யரணமெண் ணாதெஃகு சுமந்து
முன்சமத் தெழுதரும் வன்க ணாடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க
உயர்நிலை யுலக மெய்தினர் பலர்பட
10நல்லமர்க் கடந்தநின் செல்லுறழ் தடக்கை
இரப்போர்க்குக் கவித லல்லதை யிரைஇய
மலர்பறி யாவெனக் கேட்டிகு மினியே
சுடரும் பாண்டிற் றிருநாறு விளக்கத்து
முழாவிமிழ் துணங்கைக்குத் தழூஉப் புணையாகச்
 
15சிலைப்புவல் லேற்றிற் றலைக்கை குந்துநீ
நளிந்தனை வருத லுடன்றன ளாகி