“இதனாற் சொல்லியது, அவன் வென்றிக்கு அடியாகிய செல்வமும் நுண்மையும் கைவண்மையும் உடன்கூறியவாற்றான் அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.” 4. நலம்பெறு திருமணி |
74. | கேள்வி கேட்டுப் படிவ மொடியாது வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்பச் சாயறல் கடுக்குந் தாழிருங் கூந்தல் வேறுபடு திருவி னின்வழி வாழியர் |
5 | கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம் பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் வரையக நண்ணிக் குறும்பொறை நாடித் தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம்பொறிக் கவைமரங் கடுக்குங் கவலைய மருப்பிற் |
10 | புள்ளி யிரலைத் தோலூ னுதிர்த்துத் தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டிற் பருதி போகிய புடைகிளை கட்டி எஃகுடை யிரும்பி னுள்ளமைத்து வல்லோன் சூடு நிலையுற்றுச் சுடர்விடு தோற்றம் |
15 | விசும்பாடு மரபிற் பருந்தூ றளப்ப நலம்பெறு திருமணி கூட்டு நற்றோள் ஒடுங்கீ ரோதி யொண்ணுதல் கருவில் எண்ணியன் முற்றி யீரறிவு புரிந்து சால்பும் செம்மையு முளப்படப் பிறவும் |
20 | காவற் கமைந்த வரசுதுறை போகிய வீறுசால் புதல்வற் பெற்றனை யிவணர்க் கருங்கட னிறுத்த செருப்புகன் முன்ப அன்னவை மருண்டனெ னல்லே னின்வயின் முழுதுணர்ந் தொழுக்கு நரைமூ தாளனை |
25 | வண்மையு மாண்பும் வளனு மெச்சமும் தெய்வமும் யாவதுந் தவமுடை யோர்க்கென வேறுபடு நனந்தலைப் பெயரக் கூறினை பெருமநின் படிமை யானே |