6. மா சித றிருக்கை
 

76.களிறுடைப் பெருஞ்சமந் ததைய வெஃ.குயர்த்
தொளிறுவாண் மன்னர் துதைநிலை கொன்று
முரசுகடிப் படைய வருந்துறைப் போகிப்
பெருங்கட னீந்திய மரம்வலி யுறுக்கும்
 
5பண்ணிய விலைஞர் போலப் புண்ணொரீஇப்
பெருங்கைத் தொழுதியின் வன்றுயர் கழிப்பி
இறந்தோர் வாழ நல்கி யிரப்போர்க்
கீத றண்டா மாசித றிருக்கை
கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு
 
10கருவி வானந் தண்டளி சொரிந்தெனப்
பல்விதை யுழவிற் சில்லே ராளர்
பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்
கழுவுறு கலிங்கக் கடுப்பச் சூடி
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
 
15அகன்கண் வைப்பி னாடுகிழ வோயே .
 

இதுவுமது

பெயர் : மா சித றிருக்கை.

9 - 15. கால் கொண்டு...........................நாடுகிழ வோயே .

உரை :  கருவி வானம் கால் கொண்டு  தண்தளி   சொரிந்தென
தொகுதி  கொண்ட மழை மேகம் நாற்றிசையும் காலிறங்கித் தண்ணிய
மழையைப்  பெய்ததாக  ;  பல்  விதை  உழவின்  சில்  ஏராளர்  -
மிகுதியாக விதைத்தற்கேற்பப் பரந்த உழுநிலங்களையுடைய சிலவாகிய
ஏர்களை  யுடைய  உழவர்  ;  பனித்துறைப்  பகன்றைப் பாங்குடைத்
தெரியல்  -  குளிர்ந்த  நீர்த்துறையிடத்தே  மலர்ந்துள்ள  பகன்றைப்
பூவாற்றொடுத்த  அழகுடைய  மாலையை;  கழுவுறு கலிங்கம் கடுப்பச்
சூடி   -  வெளுக்கப்பட்ட  வெள்ளாடை  போலத்  தலையிற்  சூடிக்
கொண்டு   ;   இலங்கு  கதிர்த்   திருமணி   பெறூஉம்  -  உழும்
படைச்சாலிடத்தே    விளங்குகின்ற    கதிர்களையுடைய    அழகிய
மணிகளைப்  பெறுகின்ற  ;  அதன்கண் வைப்பின் நாடு கிழவோய் -
அகன்ற இடமுடைய ஊர்கள் பொருந்திய நாட்டுக்கு உரியோனே எ-று.

இடி, மின்னல், மழை முதலியவற்றின்  தொகுதியாதல்பற்றி, “கருவி
வானம்” எனப்பட்டது. மழை முகில் நாற்றிசையும் பரவுமிடத்துக் கால்