இதுவுமது பெயர் : மா சித றிருக்கை. 9 - 15. கால் கொண்டு...........................நாடுகிழ வோயே . உரை : கருவி வானம் கால் கொண்டு தண்தளி சொரிந்தென தொகுதி கொண்ட மழை மேகம் நாற்றிசையும் காலிறங்கித் தண்ணிய மழையைப் பெய்ததாக ; பல் விதை உழவின் சில் ஏராளர் - மிகுதியாக விதைத்தற்கேற்பப் பரந்த உழுநிலங்களையுடைய சிலவாகிய ஏர்களை யுடைய உழவர் ; பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல் - குளிர்ந்த நீர்த்துறையிடத்தே மலர்ந்துள்ள பகன்றைப் பூவாற்றொடுத்த அழகுடைய மாலையை; கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி - வெளுக்கப்பட்ட வெள்ளாடை போலத் தலையிற் சூடிக் கொண்டு ; இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம் - உழும் படைச்சாலிடத்தே விளங்குகின்ற கதிர்களையுடைய அழகிய மணிகளைப் பெறுகின்ற ; அதன்கண் வைப்பின் நாடு கிழவோய் - அகன்ற இடமுடைய ஊர்கள் பொருந்திய நாட்டுக்கு உரியோனே எ-று. இடி, மின்னல், மழை முதலியவற்றின் தொகுதியாதல்பற்றி, “கருவி வானம்” எனப்பட்டது. மழை முகில் நாற்றிசையும் பரவுமிடத்துக் கால் |