இனி,   “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” (தொல். பொ. 75)
என்ற சூத்திரத்து,  “ஐவகை மரபின் அரசர் பக்கமும்” என்பதற்கு இப்
பாட்டினைக்  காட்டி,  இதன்கண் அரசன் “ஓதியவாறும் வேட்டவாறும்
காண்க”  என்றும்,  “வடக்கொடு  சிவணிய வகைமையான” (பொ. 86)
என்ற     சூத்திரவுரையில்,     “மிதியற்     செருப்பிற்     பூழியர்
கோவே.....அயிரைப்  பொருந”  என்ற இது, “மலை யடுத்தது” என்றும்
நச்சினார்க்கினியர் கூறுவர்.

மண்படு   மார்பன், மழவர் மெய்ம்மறை, அயிரைப் பொருநன் என
அரசன்  சிறப்பும், “மண்ணா வாயின் மணங்கமழ் கொண்டு,  கார்மலர்
கமழும்  தாழிருங்  கூந்தல்”  என்பது  முதலாகத் தேவியின் சிறப்பும்
பாடி  “ஆயிர  வெள்ளம்  வாழிய  பலவே” யென வாழ்த்தலின், இது
செந்துறைப் பாடாண் பாட்டாயிற்று

2. கயிறுகுறு முகவை
  

22.சினனே காமங் கழிகண் ணோட்டம்
அச்சம் பொய்ச்சொ லன்புமிக வுடைமை
தெறல் கடுமையொடு பிறவு மிவ்வுலகத்
தறந்தெரி திகிரிக்கு வழியடை யாகுந்
 
5தீதுசே ணிகந்து நன்றுமிகப் புரிந்து
கடலுங் கானமும் பலபய முதவப்
பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெஃகாது
மையி லறிவினர் செவ்விதி னடந்துதம்
அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள்
 
10மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய
ஊழி யுய்த்த வுரவோ ரும்பல்
பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச்
சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தற்
கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்
 
15ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த
வெல்கெழு தானை வெருவரு தோன்றல்
உளைப் பொலிந்த மா
இழைப் பொலிந்த களிறு
வம்பு பரந்த தேர்
 
20அமர்க் கெதிர்த்த புகன் மறவரொடு
துஞ்சுமரந் துவன்றிய மலரகன் பறந்தலை
ஓங்குநிலை வாயில் தூங்குபு தகைத்த