1. அடுநெய் யாவுதி |
21. | சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென் றைந்துடன் போற்றி யவை துணையாக எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி |
5 | உருகெழு மரபிற் கடவுட் பேணியர் கொண்ட தீயின் சுடரெழு தோறும் விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி வருநர் வரையார் வார வேண்டி விருந்துகண் மானா துணீஇய பாசவர் |
10 | ஊனத் தழித்த வானிணக் கொழுங்குறை குய்யிடு தோறு மானா தார்ப்பக் கடலொலி கொண்டு செழுநகர் நடுவண் அடுமை யெழுந்த வடுநெய் யாவுதி இரண்டுடன் கமழு நாற்றமொடு வானத்து |
15 | நிலைபெறு கடவுளும் விழைதகப் பேணி ஆர்வளம் பழுநிய வையந்தீர் சிறப்பின் மாரியங் கள்ளின் போர்வல் யானைப் போர்ப்புறு முரசங் கறங்க வார்ப்புச்சிறந்து நன்கலந் தரூஉ மண்படு மார்ப |
20 | முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர் புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பிக் கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉம் மிதியற் செருப்பிற் பூழியர் கோவே குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை |
25 | பல்பயந் தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு நீரறன் மருங்கு வழிப்படாப் பாகுடிப் பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சாச் சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை யயிரைப் பொருத |
30 | யாண்டுபிழைப் பறியாது பயமழை சுரந்து நோயின் மாந்தர்க் கூழி யாக மண்ணா வாயின் மணங்கமழ் கொண்டு கார்மலர் கமழுந் தாழிருங் கூந்தல் |