கள்ளை     நிறைப்பதும் வழங்குவதும் ஒருங்கு  நிகழ்தல்  பற்றி,
“நிறைந்து   நெடிதிராத்   தசும்பு”   என்றார்.   பழையவுரைகாரரும்,
“உண்பார்க்கு வார்த்தலால் நிறைந்து நெடும்பொழுதிராத வென்றவாறு”
என்றார்.  தசும்பினை  இவ்வாறு  சிறப்பித்தவர், அதனிடத்துள்ள கள்
உண்ண  உண்ணக்  குறைபடாது நிரப்பப்பட்டமை தோன்ற, “வயிரியர்
உண்டெனத்  தவாஅக்  கள்ளின்”  என்று சிறப்பித்தார். புகையொடும்
சினம் தவிராது தவாக் கள்ளின் என இயையும்.

போரடு     தானைப்  பொலந்தார்க்  குட்டுவ, தொலையாக்  கற்ப,
வண்கை  வேந்தே,  நின்கலி  மகிழின்கண்  நின்நிலை கண்டேம் என
மாறிக்கூட்டிக்   கொள்க.   “வேந்தே  யென்னும்  விளி  முன்னின்ற
விளிகளோடு  கூடுதலின்  மாறாயிற்று.  இதனாற்  சொல்லியது அவன்
செல்வ மகிழ்ச்சி கூறியவாறாயிற்று.
  

4. நோய்தபு நோன்றொடை
  

44.நிலம்புடைப் பன்னவார்ப் பொடுவிசும்பு துடையூ
வான்றோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்
பெரிய வாயினும் அமர்கடந்து பெற்ற
அரிய வென்னா தோம்பாது வீசிக்
 
5கலஞ்செலச் சுரத்த லல்லது கனவினும்
களைகென வறியாக் கசடி னெஞ்சத்
தாடுநடை யண்ணனிற் பாடுமகள் காணியர்
காணிலி யரோநிற் புகழ்ந்த யாக்கை
முழுவலி துஞ்சு நோய்தபு நோன்றொடை
 
10நுண்கொடி யுழிஞை வெல்போ ரறுகை   
1சேண னாயினுங் கேளென மொழிந்து
புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்
கரண்கடா வுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன
மோகூர் மன்னன் முரசங் கொண்டு
 
15நெடுமொழி பணித்தவன் வேம்புமுத றடிந்து
முரசுசெய முரச்சிக் களிறுபல பூட்டி
ஒழுகை
2யுய்த்தோய் கொழுவில் பைந்துணி
3வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை
கவலை கவற்றுங் குராலம் பறந்தலை
 
20முரசுடைத் தாயத் தரசுபல வோட்டித்
 

1. சேணோனாயினு மேணென - பா  2. யுய்த்த - பா
3. வைத்துத்தலை - பா