வஞ்சித்தூக்கு வந்ததென வறிக. பிறாண்டும் இவ்வாறு வருவனவற்றை அமைத்துக்கொள்க. 4. சான்றோர் மெய்ம்மறை |
14. | நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரியையே நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழல் ஐந்தொருங்கு1 புணர்ந்த விளக்கத் தனையை |
5 | போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு துப்புத் துறைபோகிய துணிவுடை யாண்மை அக்குர னனைய கைவண் மையையே அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர்பீ டழித்த செருப்புகன் முன்ப |
10 | கூற்று வெகுண்டுவரினு மாற்று2 மாற் றலையே எழுமுடி கெழீஅய திருஞெம ரகலத்து நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை3 வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின்4 |
15 | ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ நுடங்கும் பல்களிற்றுத் தொழுதியொடு வெல்கொடி படையே ருழவ பாடினி வேந்தே இலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக் கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின் |
20 | முன்றிணை முதல்வர் போல நின்றுநீ கெடாஅ நல்லிசை நிலைஇத் தவாஅலிய ரோவிவ் வுலகமோ டுடனே. |
துறை : செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணமும், சொற்சீர்வண்ணமும். தூக்கு : செந்தூக்கு. பெயர் : சான்றோர் மெய்ம்மறை.
1.வந்தொருங்கு - பாடம். 2.வரினும்பாற்று - பாடம். 3.மேமறை - பாடம். 4.வண்டுபடு துப்பின் - பாடம். |