பாசறைக்கட்   சென்று தேவியின் பிரிவாற்றாமை கூறி, இனி அவள்
பாற்சென்று  அமைதலே  வேண்டுவ தென்பதுபட  நின்றமையின், இது
பரிசிற்றுறையாயிற்று.

பெரும்பான்மையும்       ஒழுகுவண்ணமும்,        “அவ்வினை
மேவலையாகலின்”  எனவும்,  “யார்கொ லளியை” யெனவும்  சொற்சீர்
வந்தமையின் சொற்சீர் வண்ணமும் இப்பாட்டில் உளவாயின.

10. அட்டுமலர் மார்பன்
 

20.நுங்கோ யாரென வினவி னெங்கோ
இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுத றடிந்த கடுங்சின முன்பின்
 
5நெடுஞ்சேர லாதன் வாழ்கவவன் கண்ணி
வாய்ப்பறி யலனே வெயிற்றுக ளனைத்தும்
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே
கண்ணி னுவந்து நெஞ்சவிழ் பறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பறி யலனே
 
10கனவினும்,
ஒன்னார் தேய வோங்கி நடந்து
படியோர்த் தேய்த்து வடிமணி யிரட்டும்
கடாஅ யானைக் கணநிரை யலற
வியலிரும் பரப்பின் மாநிலங் கடந்து
 
15புலவ ரேத்த வோங்குபுகழ் நிறீஇ
விரியுளை மாவுங் களிறுந் தேரும்
வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசிக்
கடிமிளைக் குண்டு கிடங்கின்
நெடுமதி னிலைஞாயில்
 
20அம்புடை யாரெயி லுள்ளழித் துண்ட
அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன்
எமர்க்கும் பிறர்க்கும் யாவ ராயினும்
பரிசின் மாக்கள் வல்லா ராயினும்
கொடைக்கட னமர்ந்த கோடா நெஞ்சினன்
 
25மன்னுயி ரழிய யாண்டுபல மாறித்