“இதனாற் சொல்லியது, அவன் கொடைச் சிறப்பும், அவன் வென்றிச் சிறப்பும் உடன் கூறியவா ராயிற்று. அம் மறவரது கொடைக்குக் காரணம் அவன் வென்றியாகலின், துறை வாகை யாயிற்று.” 10. நாடுகா ணவிர்சுடர் |
40. | போர்நிழற் புகன்ற சுற்றமொ டூர்முகத் திறாஅ லியரோ பெருமநின் றானை இன்னிசை யிமிழ்முர சியம்பக் கடிப்பிகூஉப் புண்டோ ளாடவர் போர்முகத் திறுப்பக் |
5 | காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல் வந்திறை கொண்டன்று தானை யந்திற் களைநர் யாரினிப் பிறரெனப் பேணி மன்னெயின் மறவ ரொலியவிந் தடங்க ஒன்னார் தேயப் பூமலைந் துரைஇ |
10 | வெண்டோடு நிரைஇய1 வேந்துடை யருஞ்சமம் கொன்றுபுறம் பெற்று மன்பதை நிரப்பி வென்றி யாடிய தொடித்தோண் மீகை எழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்துப் பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன் |
15 | சுடர்வீ வாகைக் கடிமுத றடிந்த தார்மிகு மைந்தி னார்முடிச் சேரல் புன்கா லுன்னஞ் சாயத் தெண்கள்2 வறிதுகூட் டரிய லிரவலர்த் தடுப்பத் தான்றர வுண்ட நனைநறவு மகிழ்ந்து |
20 | நீரிமிழ் சிலம்பி னேரி யோனே செல்லா யோதில் சில்வளை விறலி மலர்ந்த வேங்கையின் வயங்கித ழணிந்து மெல்லியன் மகளி ரெழினலஞ் சிறப்பப் பாணர் பைம்பூ மலைய விளையர் |
25 | இன்களி வழாஅ மென்சொ லமர்ந்து நெஞ்சுமலி யுவகையர் வியன்களம் வாழ்த்தத் தோட்டி நீவாது தொடிசேர்பு நின்று பாக ரேவலி னொண்பொறி பிசிரக் |
1. ‘நிரைத்த’ என்றும் பாடம்.2. ‘தெண்கண்’ என்றும் பாடம். |