1. புலாஅம் பாசறை
 

61.பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்
வாடை துரக்கு நாடுகெழு பெருவிறல்
ஓவத் தன்ன வினைபுனை நல்லிற்
பாவை யன்ன நல்லோள் கணவன்
 
5பொன்னி னன்ன பூவிற் சிறியிலைப்
புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோ
புலர்ந்த சாந்திற் புலரா வீகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி
முழவுமண் புலர விரவல ரினைய
 
10வாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென
இரக்கு வாரே னெஞ்சிக் கூறேன்
ஈத்த திரங்கா னீத்தொறு மகிழான்
ஈத்தொரு மாவள் ளியனென நுவலுநின்
நல்லிசை தரவந் திசினே யொள்வாள்
 
15உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை
நிலவி னன்ன வெள்வேல் பாடினி
முழவிற் போக்கிய வெண்கை
விழவி னன்னநின் கலிமகி ழானே.
 

துறை : காட்சி வாழ்த்து.
வண்ணம்  : ஒழுகு வண்ணம்.
தூக்கு : செந்தூக்கு.
பெயர் : புலாஅம்பாசறை.

1 - 8. பலாஅம் ................. பாரி

உரை : பலாஅம்  பழுத்த பசும்புண் அரியல் -  பலாமரத்திலே
பழுத்து   வெடித்த  பழத்தின்   வெடிப்பிலிருந்தொழுகும்   தேனை;
வாடை  துரக்கும் - வாடைக்காற்று எறியும் ; நாடு கெழு பெருவிறல் -
பறம்பு  நாட்டிற்  பொருந்திய  பெரிய  விறல் படைத்தவனும் ; ஓவத்
தன்ன  வினை  புனை  நல்லில்  -  ஓவியத்தில்  எழுதியது போன்ற
வேலைப்பாடமைந்த  நல்ல  மனையின்  கண்ணே இருக்கும் ; பாவை
யன்ன  நல்லோள் கணவன் - பாவை போன்ற நல்ல அழகும் நலமும்
உடையாட்குக்  கணவனும்  ; பொன்னின்  அன்ன பூவின் சிறியிலை -
பொன் போலும் நிறமுடைய பூவினையும்