“இதனாற்  சொல்லியது   ;  காம  வேட்கையிற் செல்லாத அவன்
வென்றி வேட்கைச் சிறப்புக் கூறியவாறாயிற்று. “

“இஃது  அவனரிவை கற்பு முல்லையைப்பற்றி  வந்தமையால் துறை
முல்லையாயிற்று.”

2 . வினை நவில் யானை
 

82.பகை பெருமையிற் றெய்வஞ் செப்ப
ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்க முன்பிற் செறுநர்
செல்சமந் தொலைத்த வினைநவில் யானை
5கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி
வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல
மறவர் மறல மாப்படை யுறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்பக்
காடுகை காய்த்திய நீடுநா ளிருக்கை
 
10இன்ன வைகல் பன்னா ளாக
பாடிக் காண்கு வந்திசிற் பெரும
பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்
கொலக் கொலக் குறையாத் தானைச் சான்றோர்
வண்மையுஞ் செம்மையுஞ் சால்பு மறனும்
 
15புகன்று புகழ்ந் தசையா நல்லிசை
நிலந்தரு திருவி னெடியோய் நின்னே .
 

துறை : காட்சி வாழ்த்து.
வண்ணம் : ஒழுகு வண்ணமும்சொற்சீர் வண்ணமும்.
தூக்கு : செந்தூக்கு.
பெயர் : வினை நவில் யானை.

1 - 10. பகை.....................பன்னா ளாக .
 

உரை :  பகை பெருமையின் - நினது  பகைமை  பெரிதாதலால் ;
தெய்வம்  செப்ப  -  பகைவர்  தமக்குப் பாதுகாவலாகத் தெய்வத்தை
வழிபட  ;  ஆர்  இறை  அஞ்சா வெருவரு கட்டூர் - இனி திருத்தற்
கரிதாகியும்   வீரர்க்கு  அச்சம்  பயவாத  பகைவர்க்கு  அச்சத்தைத்
தருகின்ற  பாசறையிலே  ;  பல்கொடி  நுடங்கு  முன்பிற்  செறுநர் -
பல்வகைக் கொடிகள்