5. கானுணங்கு கடுநெறி
 

25.மாவா டியபுல நாஞ்சி லாடா
கடாஅஞ் சென்னிய கடுங்கண் யானை
இனம்பரந்த புலம் வளம்பரப் பறியா
நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி
 
5நீ, உடன்றோர் மன்னெயில் தோட்டி வையா
கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்துப்
பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கின்
ஆண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி
முனையகன் பெரும்பா ழாக மன்னிய
 
10உருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை
வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்கக்
கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ
நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே.
 

துறை : வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம் : ஒழுகுவண்ணமும்சொற்சீர்வண்ணமும்.
தூக்கு : செந்தூக்கும்வஞ்சித்தூக்கும்.
பெயர் : கானுணங்கு கடுநெறி.
 

10 - 13. உருமுறழ்பு.............நாடே.  

உரை : உரும்  உறழ்பு  இரங்கும் முரசின்- இடிபோல முழங்கும
முரசத்தோடு;
    பெரு    மலை      வரையிழி       அருவியின்
ஒளிறு       கொடி நுடங்க -பெரிய மலையின் பக்கத்தே   இழியும்
அருவிபோல்  விளங்கும் துகிற்  கொடிகள்  அசைய;   கடும்   பரி
கதழ்      சிறகு       அகைப்ப   -    விரைந்த    செலவாகிய
சிறகுகளையுடைய குதிரையாகிய புள் பறந்தோட; நீ நெடுந்     தேர
ஓட்டிய  -  நீ   நின்   நெடிய  தேர்களைச்     செலுத்திய; பிறர்
அகன்றலை நாடு -    பகைவருடைய    அகன்ற  இடத்தையுடைய
நாடுகள் எ - று.
  

முரசின்     முழக்கிற்கு இடி முழக்கை யுவமங் கூறல் மரபு;  “படு
மழையுருமின்  இரங்கு முரசு”(புறம். 350) என்று ஏனைச் சான்றோரும்
கூறுதல்  காண்க.  முரசின் என்புழி ஒடு வுருபை விரித்து முரசினொடு
தேர்  ஓட்டிய  என இயைக்க. பழைய வுரைகாரரும், முரசினொடு என
ஒடு  விரித்து அதனைத் தேரோட்டிய என்பதனோடு முடிக்க” என்பர்.
இனி,   இன்னென்றதனை  அல்வழிச்  சாரியையாக்கி,   முழங்கவென
ஒருசொல்  வருவித்து,  முரசு  முழங்க,  கொடி  நுடங்க,  சிறககைப்ப
தேரோட்டிய என