என்பது குறிப்பு. எனவே, வேந்தன் நாடோறும் போர்வேட்டு வினைபுரிதலையே மேற்கொண்டிருந்தமை பெற்றாம். இதுகாறும் கூறியது ; அணங்கெழில் அரிவையர்ப் பிணிக்கும் மார்ப, நின் தாணிழல் வாழ்வோர், கட்டூர் நாப்பண், முரசம் அதிர, உண்ணா தடுக்கியபொழுது பல கழியவும், இன்னார் உறையுள் தாம் பெறினல்லது, அல்கலும் பெரிதமர்ந்து, வடபுலவாழ்நரின் இன்னகை மேய பல்லுறை, பெறுபகொல்லோ ; பெறுதல் அரிது போலும் என வினைமுடிவு செய்க. இனிப் பழையவுரைகாரர், “அரிவையர்ப் பிணிக்கும் மணம் கமழ் மார்ப, நின் தாள்நிழலோர் உண்ணா தடுக்கிய பொழுது பல கழிய இன்னார் உறையுள் தாம் பெறினன்றி, இன்னகை அல்கலும் மேய பல்லுறை பெறுப கொல்? பெறார் ; அவர் அவ்வாறு அது பெறினன்றி நின் மார்பாற் பிணிக்கப்பட்ட அரிவையரும் இன்னகை அல்கலும் மேய பல்லுறை பெறுவது ஏது எனக் கூட்டி வினைமுடிவு செய்க” என்பர். “இதனாற் சொல்லியது ; காம வேட்கையின் ஓடாத அவன் வென்றி வேட்கைச் சிறப்புக் கூறியவாறாயிற்று”. 9. மண்கெழு ஞாலம் |