புணர்ந்தியல, சினையிற் புள்ளும் மிஞிறும் ஆர்ப்ப, பழனும் கிழங்கும் மிசையற வறியாதொழிய, ஆனிரை புல்லருந்துகள கூலம் கெழும, ஊழி நடுவுநின் றொழுக, நாடு தொழுதேத்த, யர்நிலை யுலகந் துயர்ந்தோர் பரவ, அரசியல் பிழையாதொழியச் செருவில் மேம்பட்டுத் தோன்றி, நீ நின் அரிவையொடு பொலிந்து நோயிலையாகியர் எனக்கூட்டி வினைமுடிவு செய்க” என்றும், “இதனாற் சொல்லியது அவன் நாடு காவற் சிறப்புக்கூறி வாழ்த்தியவாறாயிற்” றென்றும், “அவ்வாறு நாடுகாவற் கூறினமையால் துறை காவல் முல்லையாயிற் றென்றும் கூறுவர். 10. வலிகெழு தடக்கை |