புணர்ந்தியல,     சினையிற்  புள்ளும்  மிஞிறும்   ஆர்ப்ப, பழனும்
கிழங்கும்  மிசையற  வறியாதொழிய,  ஆனிரை புல்லருந்துகள கூலம்
கெழும,  ஊழி  நடுவுநின்  றொழுக,  நாடு  தொழுதேத்த,  யர்நிலை
யுலகந்  துயர்ந்தோர்  பரவ,  அரசியல்  பிழையாதொழியச் செருவில்
மேம்பட்டுத்    தோன்றி,    நீ   நின்   அரிவையொடு  பொலிந்து
நோயிலையாகியர்   எனக்கூட்டி   வினைமுடிவு   செய்க”  என்றும்,
“இதனாற்    சொல்லியது    அவன்    நாடு   காவற்  சிறப்புக்கூறி
வாழ்த்தியவாறாயிற்”  றென்றும், “அவ்வாறு நாடுகாவற் கூறினமையால்
துறை காவல் முல்லையாயிற் றென்றும் கூறுவர்.
  

10. வலிகெழு தடக்கை
 

90.மீன்வயி னிற்ப வானம் வாய்ப்ப
அச்சற் றேம மாகியிரு டீர்ந்
தின்பம் பெருகத் தோன்றித் தந்துணைத்
துறையி னெஞ்சாமை நிறையக் கற்றுக்
 
5கழிந்தோ ருடற்றுங் கடுந்தூ வஞ்சா
ஒளிறுவாள் வயவேந்தர்
களிறொடு கலந்தந்து
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
அகல்வையத்துப் பகலாற்றி
 
10மாயாப் பல்புகழ் வியல்விசும் பூர்தர
வாள்வலி யறுத்துச் செம்மை பூஉண்
டறன் வாழ்த்த நற்காண்ட
விறன் மாந்தரன் விறன்மருக
ஈர முடைமையி னீரோ ரனையை
 
15அளப் பருமையி னிருவிசும் பனையை
கொளக்குறை படாமையின் முந்நீ ரனையை
பன்மீ னாப்பட் டிங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
உருகெழு மரபி னயிரை பரவியும்
 
20கடலிகுப்ப வேலிட்டும்
உடலுநர் மிடல் சாய்த்தும்
மலையவு நிலத்தவு மருப்பம் வௌவிப்
பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய
கொற்றத் திருவி னுரவோ ரும்பல்
 
25கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோவே