9. செங்கை மறவர்
  

49.யாமுஞ் சேறுக நீயிரும் வம்மின்
துயலுங் கோதைத் துளங்கியல் விறலியர்
கொலைவல் வாழ்க்கைநுங் கிளையினி துணீஇயர்
களிறுபரந் தியலக் கடுமா தாங்க
 
5ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
எஃகுதுரத் தெழுதருங் கைகவர் கடுந்தார்
வெல்போர் வேந்தரும்வேளிரு மொன்றுமொழிந்து
மொய்வளஞ் செருக்கி மோசிந்துவரு மோகூர்
வலம்படு குழூஉநிலை யதிர மண்டி
  
10நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர்
நிறம்படு குருதி நிலம்படர்ந் தோடி
மழைநாட் புனலி னவற்பரந் தொழுகப் 
படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து
படுகண் முரச நடுவட் சிலைப்ப
 
15வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக்
கருஞ்சின விறல்வேம் பறுத்த
பெருஞ்சினக் குட்டுவற் கண்டனம் வரற்கே.
 

துறை : விறலியாற்றுப்படை.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர் : செங்கை மறவர்.

4 - 9. களிறு...........மண்டி. 

உரை : -களிறு பரந்து இயல -யானைப் படையிலுள்ள  யானைகள்
பரந்து   செல்ல  ;  கடுமா  தாங்க  -  விரைந்த  செலவினையுடைய
குதிரைகள் தம்மைச் செலுத்தும் வீரர் குறிப்பின்படி அணி  சிதையாதே
அவரைத்  தாங்கிச்  செல்ல  ;  ஒளிறு  கொடி நுடங்கத் தேர் திரிந்து
கொட்ப  -  விளங்குகின்ற  கொடி  யசைய  வருந் தேர்கள் செல்லும்
நெறிக்  கேற்ப  விலகிச்  சுழன்று செல்ல ; எஃகு துரந்து   எழுதரும்-
வேற்படையைச்  செலுத்தி  யெழும்;  கை  கவர் கடுந்தார் -  பகைவர்
முன்னணிப்  படையின்  இரு  மருங்கினும் வரும் பக்கப்   படையைப்
பொருது  கவரும் கடிய தூசிப் படையினையும்; வெல்போர்  வேந்தரும்
வேளிரும்  ஒன்று  மொழிந்து  -  வெல்கின்ற  போரினையு  முடைய
முடிவேந்தரும்   குறுநில  மன்னரும்  தம்மில்  ஒற்றுமை   மொழிந்து
உடன்வர ; மொய்வளம் செருக்கி மொசிந்து