5. நிரைய வெள்ளம்
|
15. | யாண்டுதலைப் பெயர வேண்டுபுலத் திறுத்து முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம்
|
5 | பரந்தாடு கழங்கழி1 மன்மருங் கறுப்பக் கொடிவிடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர அழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத் தொல்கவி னழிந்த2 கண்ணகன் வைப்பின் வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப்
|
10 | பீரிவர்பு பரந்த3 நீரறு நிறைமுதற் சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற் புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும் புல்லிலை வைப்பிற் புலஞ்சிதை யரம்பின் அறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின்
|
15 | பகைவர் நாடுங் கண்டுவந் திசினே கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு விழவறு பறியா முழவிமிழ் மூதூர்க் கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்துச்
|
20 | சீர்பெறு கலிமகி ழியம்பு முரசின் வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை தாரணிந் தெழிலிய தொடிசிதை மருப்பின் போர்வல் யானைச் சேர லாத நீவா ழியரிவ் வுலகத் தோர்க்கென
|
25 | உண்டுரை மாறி மழலை நாவின் மென்சொற் கலப்பையர் திருந்துதொடை வாழ்த்த வெய்துற வறியாது நந்திய வாழ்க்கைச் செய்த மேவ4 லமர்ந்த சுற்றமொடு ஒன்றுமொழிந் தடங்கிய கொள்கை யென்றும்
|
30 | பதிபிழைப் பறியாது துய்த்த லெய்தி நிரைய மொரீஇய வேட்கைப் புரையோர்
|
1.கழங்குவழி - பாடம் 2.கவினிழந்த - பாடம் 3.பீர்வாய் பரந்த - பாடம் 4.செய்தன மேவல் - பாடம் |