போற்றலை; இரவலர் நடுவண் கொடை போற்றலை ;   பெரியோரைப்
பேணிச் சிறியோரை யளித்தி ; அனைய நின் குணங்கள் அளப்பரியை
;  நீ  அவ்வாறொழுகுதலால்,  பிரிந்த  நின்வயின்  நல்லிசை  இனிக்
கனவிலும்  பிறர்  நச்சுதலறியா  ; அவ்வாறு அறியாமையின், பெரும,
நி்ன்  புகழ்  நிலைஇ  நின்னிடத்துக்  கேடிலவாக  என மாறிக் கூட்டி
வினைமுடிவு   செய்க”  என்றும்,  “அனைய  வளப்பருங்  குரையை
யென்றது, சிறியோரை யளித்தி என்றதன் பின்னே நிற்க வேண்டுதலின்
மாறாயிற்” றென்றும் கூறுவர்.

“இதனாற்  சொல்லியது: அவன் பல குணங்களும் ஒருங்கு புகழ்ந்து
வாழ்த்தியவாறாயிற்று.”

10. புண்ணுடை யெறுழ்த்தோள்
 

80.வான்மருப்பிற் களிற்றியானை
மாமலையிற் கணங்கொண்டவர்
எடுத்தெறிந்த விறன்முரசம்
கார்மழையிற் கடிதுமுழங்கச்
  
5சாந்துபுலர்ந்த வியன்மார்பிற்
றொடிசுடர்வரும் வலிமுன்கைப்
புண்ணுடை யெறுழ்த்தோட் புடையலங்கழற்காற்
பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வாள்
ஒடிவி றெவ்வ ரெதிர்நின்று றுரைஇ
10இடுக திறையே புரவெதிர்ந் தோற்கென
அம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ
அனையை யாகன் மாறே பகைவர்
கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக்
கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி
 
15புலவரைத் தோன்றல் யாவது சினப்போர்
நிலவரை நிறீஇய நல்லிசைத்
தொலையாக் கற்பநின் றெம்முனை யானே.

 

துறை : வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு.
வண்ணம்  : ஒழுகுவண்ணம்.
தூக்கு : செந்தூக்கும்வஞ்சித்தூக்கும்.
பெயர் : புண்ணுடையெறுழ்த்தோள்.