இதனாற் சொல்லியது அவன் கொடைச் சிறப்பும் காமவின்பச் சிறப்பும் உடன் கூறி வாழ்த்தியவா றாயிற்றென்பது பழையவுரைக் கருத்து. 9. துவராக் கூந்தல் |
89. | வானம் பொழுதொடு சுரப்பக் கானம் தோடுறு மடமா னேறுபுணர்ந் தியலப் புள்ளு மிஞிறு மாச்சினை யார்ப்பப் பழனுங் கிழங்கு மிசையற வறியாது |
5 | பல்லா னன்னிரை புல்லருந் துகளப் பயங்கடை யறியா வளங்கெழு சிறப்பிற் பெரும்பல் யாணர்க் கூலங் கெழும நன்பல் லூழி நடுவுநின் றொழுகப் பல்வே லிரும்பொறை நின்கோல் செம்மையின் |
10 | நாளி னாளி னாடுதொழு தேத்த உயர்நிலை யுலகத் துயர்ந்தோர் பரவ அரசியல் பிழையாது செருமேந் தோன்றி நோயிலை யாகியர் நீயே நின்மாட் டடங்கிய நெஞ்சம் புகர்படு பறியாது |
15 | கனவினும் பிரியா வுறையுளொடு தண்ணெனத் தகர நீவிய துவராக் கூந்தல் வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து வாழ்நா ளறியும் வயங்குசுடர் நோக்கத்து மீனொடு புரையும் கற்பின் |
20 | வாணுத லரிவையொடு காண்வரப் பொலிந்தே . |
துறை : காவன் முல்லை. வண்ணமும் தூக்கு மது. பெயர் : துவராக் கூந்தல் . 1 - 8. வானம்......................ஒழுக . உரை : வானம் பொழுதொடு சுரப்ப - மழை உரிய காலத்திலே தப்பாது பொழிய ; கானம் தோடுறு மடமான் ஏறு புணர்ந்து இயல - காட்டிடத்தே தொகுதிகொண்ட மடப்பம் பொருந்திய பிணைமான்கள் தத்தம் ஆணொடுகூடி இனிது செல்ல ; புள்ளும் மிஞிறும் மாச்சினை |