4. உரைசால் வேள்வி
 

64.வலம்படு முரசின் வாய்வாட் கொற்றத்துப்
பொலம்பூண் வேந்தர் பலர்தில் லம்ம
அறங்கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய
உரைசால் வேள்வி முடித்த கேள்வி
 
5அந்தண ரருங்கல மேற்ப நீர்பட்
டிருஞ்சே றாடிய மணன்மலி முற்றத்துக்
களிறுநிலை முணைஇய தாரருந் தகைப்பிற்
புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே
எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி
 
10அலங்கும் பாண்டி லிழையணிந் தீமென
ஆனாக் கொள்கையை யாதலி னவ்வயின்
மாயிரு விசும்பிற் பன்மீ னொளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
உறுமுரண் சிதைத்தநின் னோன்றாள் வாழ்த்திக்
 
15காண்கு வந்திசிற் கழறொடி யண்ணல்
மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்
இதழ்வனப் புற்ற தோற்றமொ டுயர்ந்த
மழையினும் பெரும்பயம் பொழிதி யதனால்
பசியுடை யொக்கலை யொரீஇய
 
20இசைமேந் தோன்றனின் பாசறை யானே.
 

துறை : காட்சிவாழ்த்து.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்  : உரைசால் வேள்வி.

1 - 2. வலம்படு ..................... அம்ம.  

உரை : வலம்பட    முரசின்  -  வெற்றி   யுண்டாக  முழங்கும்
முரசினையும்  ;  வாய்  வாள்  கொற்றத்து  - தப்பாத வாட்படையாற்
பெறும்  வெற்றியினையும்  ;  பொலம்  பூண்  வேந்தர் - பொன்னாற்
செய்த  பூண்களையுமுடைய  வேந்தர்கள்  ;  பலர் தில் - பலர் தாம்
உளர் ; அம்ம - இன்னமும் கேட்பாயாக எ - று.

வெற்றியும்     விழவும்  கொடையும்  குறித்து முழங்கும் மூவகை
முரசுகளுள்   வேந்தர்க்கு   வெற்றிமுரசு  சிறந்தமையின்,  “வலம்படு
முரசினை”   எடுத்தோதியும்,  கொற்றத்துக்கு  வாயிலாதலால்,  “வாய்
வாளை”   விதந்தும்   கூறினார்.   பொலம்   -   பொன்.  வேந்தர்
பலருளராயினும் அவராற் பயனில்லை