எண்ணினையோ வெனின் அதுவும் எண்ணினேனல்லேன்; கட்புலனுக்கு வரையறைப்பட்டதுபோல ஆபரந்தாலொத்த செலவிற் பல யானையை அவன் தானையானே காண்பல் எனக் கூட்டி வினை முடிவு செய்க,” என்பர் . “இதனாற் சொல்லியது ; அவன் படைப் பெருமைச் சிறப்புக் கூறியவாறாயிற்று”. “இப் பாட்டிற் பொதுப்படப் படையெழுச்சி கூறியதனை உழிஞை யவர மென்றது, ஆண்டு அப்படை யெழுங் காலத்து நொச்சி மீ்திற் போர் குறித்தெழுந்ததை ஒரு காரணத்தால் அறிந்து போலும்”, என்று பழையவுரை கூறியது ஆராயத்தக்கது. 8. பிறழ நோக்கியவர் |