பக்கம் எண் :

பரிபாடல்- வையை193

மதுவைக் கண்ணாலே கவர்ந்து பருகும்படி, உம்பர் உறையும் ஒளிகிளர்
வான் ஊர்பு ஆடும் அம்பி - தேவர்கள் உறைதற்கிடமான ஒளிமிக்க
வானத்தின்கண் வைமானிகர் ஊர்ந்து செல்லாநின்ற விமானத்தை,
கரவாவழக்கிற்று- தெளிவாகக் காட்டாநின்ற தெளிந்த நீரோட்டத்தையுடையது
அவ் வையை யகம்;


      (வி-ம்.) நீர் அணி - நீராடற்கேற்ற அணிகள். வெறி - கள்; தேன்.
வரையகலம் - தொய்யிலெழுதிய. மார்புமாம்: வரை அகலம் என்பதற்கு
வரையை ஆகுபெயராகக் கொண்டு நகிலாகிய மலைகளையுடைய மார்பு
என்க. இழை - அணிகலன். தகை - கட்டுதல். பொறி - மூட்டுவாய்.
பொலங்கோதை - பொன்னரிமாலை. பாகர் - பாகு. இறை - தங்கிய.
வழைமது - இளங் கள். நுகர்பு - நுகர்ந்து. நாகர் - தேவர்.
நாகலோகத்தில் உள்ள பாம்புகளுமாம். புணர்ச்சிக்கு நாகர் புணர்ச்சி
உவமை என்க. 'நல்வளவினை நாகர்' என மாறுக நளிபுணர்மார்
- இறுகப் புணரும் பொருட்டு. காரிகை மது - அழகாகிய மது. சீர் -
தாளம். பயம் - இன்பம். உணர்ச்சியாற் கிளர்ச்சியுடைய செவி என்க.
ஊர்பு ஆடும் - ஊர்ந்து திரியும். அம்பி - விமானம்: வானவூர்தி.
தெவி - கொண்டு.

      வானத்திலே செல்லும் வைமானிகருடைய விமானத்தைத்
தன்னுட்கரவாது நன்கு காட்டாநின்ற தெளிந்த நீரோட்டம் என்க.
வைமானிகர் - விமானமுடையவர்; தேவரில் ஒரு வகுப்பினர்.

      இனி, பரிமேலழகர் உரையின்கண் நீரோட்டத்தை என்பதன்றி
'நீரோடத்தை' என்றும் பாடபேதமுளது. கரவா என்றது மறைவின்றி
நன்குகாட்டும் என்பதுபட நின்றது. எனவே தெளிந்த நீரோட்டம்
என்பதாயிற்று.

      இனி உறை வானூர்பு ஆடும் உம்பர் அம்பி கரவா என மாறி
வானின் விமானத்து ஊர்ந்து திரியும் உம்பரை நீரோடம் மறைவின்றிக்
காட்டாநிற்கும் எனப் பொருள் கூறி, தெளிந்த நீரின்மேல் ஓடமூர்ந்து
செல்லும் மகளிரும் மைந்தரும் வானவெளியில் விமானமூர்ந்து செல்லும்
தேவமகளிரையும் மைந்தரையும் ஒத்துத் தோன்றா நின்றனர் என்பது
கருத்தாகக் கொள்ளினும் பொருந்தும்.

      ஆங்கு, அதை என்னுமிரண்டும் அசைகள்.

      (பரிமே.) ஐம்புலன்களாலும் இன்பம் நுகர்தற்கு
இடனாயிற்றென்றவாறு.

      64. (திகழ்தகை வகை செறி பொறி) வினைத்தொகை யடுக்கு.

      'பரந்து தெவி' என்னும் செய்தென்னெச்சங்கள் கவர்புற என்னும்
'வினைமுதல் வினைகொள்ள அச் செயவெனெச்சம் வழக்கிற்று' என்னும்
பிறவினை கொண்டது.

      'இத்துணையும் வையையைப் படர்க்கையாக்கிக் கூறிமேல் எதிர்
முகமாக்கி . . . .. . . .' (க் கூறுகின்றாள்.) . . . . . .

ப.--13