78. ஆகமங்களையுணர்ந்த பூசகர்
அத் திருவாதிரைக்குத் தெய்வ மாகிய
இறைவனுக்கு (சிவபெருமானுக்கு) விழாவைத் தொடங்க.
80 - 87: வெம்பாதாக......................................மடைவாய்த்தன்று
(இ - ள்.) வியல் நிலவரைப்பு - அகன்ற இந் நிலவுலகம்,
வெம்பாதாக - ஞாயிற்றின் தெறலாலே வெப்பமுடைத்தாகாமல்
மழையாலே குளிர்வதாக என்று வாழ்த்தி, அம்பா ஆடலின் ஆய்தொடிக்
கன்னியர் - அம்பா ஆடுதலையுடைய ஆராய்ந்திட்ட வளையலை
அணிந்த கன்னிமைப் பருவத்து மகளிர், முனித்துறை முதல்வியர் -
சடங்கறிந்த முதுபார்ப்பனிமார், முறைமை காட்ட - நோன்பு செய்யும்
முறைமையினை அறிவிக்க, பனி புலர்பு ஆடி - பனியையுடைய
வைகறைப்பொழுதிலே நீராடி, பருமணல் அருவியின் ஊதை ஊர்தர -
பரிய மணலிலே ஒழுகாநின்ற நீரின்கண்ணே குளிர்வாடை தவழ்ந்து
வருதலானே, உரை சிறை வேதியர்-நினது நீர் உராய்ந்து சென்ற
கரையின்கண்ணே உறையாநின்ற அந்தணரது, நெறி நிமிர் நுடங்கு அழல்
பேணிய சிறப்பின் - வேத நெறியாலே வளர்க்கப்பட்ட வளைந்தெரியும்
தீயினைப் பேணிய சிறப்புடனே, தையல் மகளிர் - ஒப்பனையையுடைய
அக் கன்னி மகளிர் சென்று, ஈரணி புலர்த்தர-அதன்கண் தம் ஈர
ஆடையை உலர்த்தாநிற்ப, வையை-வையையே, மடை நினக்கு வாய்த்தன்று.
அத் தீயின்கண் கொடுக்கும் அவி நினக்கு வாய்ப்புடையதாயிருந்தது;
(வி - ம்.) வெம்பாதாக என்றது, மழையால் குளிர்வதாக
என்பதுபட நின்றது. அம்பாவாடல் - தைந்நீராடல். அம்பா - தாய்.
தாயோடு ஆடப்படுதலின் அம்பாவாடல் எனப்பட்டது கன்னியர் -
மணமாகாத இளமகளிர். முனித்துறை - சடங்கு முதல்வியர் என்றது.
பார்ப்பன முதுமகளிரை. முறைமை - நோற்கும் முறைமை. புலர்பு -
வைகறைப் பொழுது. புலர்பின்கண் என இடப்பொருட்டாக்குக. மணலருவி
என்றது, தெளிந்த நீர் என்பதுபட நின்றது. ஊதை - வடக்காற்று நீரிற்
றவழ்ந்து ஊதை வீசுதலானே குளிருடையராய் அக்குளிர் நீங்கத் தீயிற்
புலர்த்தர என்க. அத்தீயினை வலம் வந்து வழிபட்டு என்பார், 'பேணிய
சிறப்பின்' என்றார். உரைசிறை: வினைத்தொகை. உரைத்தல் -
உரிஞ்சுதல். நீரான் உரையப்பட்ட சிறை என்க. சிறை - கரை.
சிறைவேதியர் - கரையிலிறையும் அந்தணர். நெறி - வேதநெறி. நிமிர் -
வளர்ந்த: வளர்க்கப்பட்ட என்க. நுடங்கு அழல் - வளைந்து வளைந்து
எரியும் தீ. தையல் - ஒப்பனை. ஈரணி - ஈர ஆடை. வையை: விளி.
மடை - அவி. வாய்த்தன்று - வாய்த்தது.
(பரிமே.) புலர்தற்கண் என்னும் ஏழனுருபு தொக்கது.
88 - 92: மையாடல்...............................நதி
(இ - ள்.) மையாடல் மழபுலவர் மாறு எழுந்து - மையோலை
பிடித்த இளம் புலவரது விளையாட்டிற்கு மாறாக எழுந்து, பொய் |
|
|
|