(வி-ம்.) தானையான் யாறு இருசார் கரையை மோதிக் கலங்கிப்  
      பின்னர் அணை நின்று தெளிந்து மாலையில் தன்னீழலிற் றுறக்கத்  
      தொழிலைக் காட்டும்; காலைப்பொழுதிலோ குருதியின் தன்மைத்தாம் என்க.  
       
            மல்லிகை முதலாகச் சுரபுன்னை ஈறாக வுள்ளன எல்லாம் 
       
      அவற்றின் மலர்க்கு ஆகுபெயர்கள். மௌவல் - முல்லை: காட்டு  
      மல்லிகையுமாம். மணங்கமழ் சண்பகம். நல்லிணர் நாகம் என்பன தம்  
      பொருட்கேற்ற இயற்கை யடையடுத்து நின்றன. அல்லி, வெள்ளாம்பலும்;  
      ஆம்பல், அரக்காம்பலுமாகக் கொள்க. கழுநீர் - செங்கழுநீர். வகுளம் -  
      மகிழம்பூ , நீர்ப்பு நிலப்பூ கோட்டுப்பூ கொடிப்பூ என்னும்  
      நால்வகைப்பூவும் கமழும் கரை என்பார் 'எல்லாம் கமழும்' என்றார். 
      நீர்க்கரையாதலின் நீர்ப் பூக்களும் கமழ்ந்தன என்க.  
       
            'கலிழ' என்னும் செயவெனெச்சத்தைக் கலிழ்ந்து எனச் 
      செய்தெ  
      னெச்சமாகக் கொள்க.  
       
            தேறித் தெளிந்து - மிகத் தெளிந்து என்க. துறக்கத் 
      தொழில் - 
      வானுலகின்கண் நிகழும் நிகழ்ச்சிகள். கார் - இருள்: ஆகுபெயர். கலிழ்  
      - கலங்கிய.  
       
            காலைப்பொழுதிற் கலங்குதற்குக் காரணம் நீராடுதல் 
      என்க.  
      இதனால் நீராடன் மிகுதி கூறியவாறு.  
       
            (பரிமே.) 81. கரையென்றது கரையணைந்த நீரோட்டத்தை. 
       
       
            இங்ஙனம் புனலாட . . . . . .. . . . . . . . 
      . . . . . . . .  
       
       87 - 92: சுடுநீர் . . . . . . . . காண்மின்  
       
       
            (இ-ள்.) (92) நேர் இறை முன்கை நல்லவள் - நேரிய 
       
      இறையினையுடைய முன்கையினையுடைய இந் நங்கை, சிவந்த பிண்டிக்  
      கடிமலர் - அசோகினது சிவந்த புதுமலரை, சுடு நீர் வினைக் குழையின்  
      ஞால - தீயிலிட்டுச் சுட்டமையானே ஒளிமிக்க நீர்மையினையுடைய  
      தொழிற் சிறப்புடைய குழைபோலத் தூங்கும் படியாக, தன் காதிற் செரீஇ 
      - தனது செவியிலே செருகிக் கொண்டு, விடுமலர்ப் பூங்கொடிபோல  
      நுடங்கி - கட்டலர்ந்த மலரையுடைய பூங்கொடிபோல ஒல்கி, அடிமேல்  
      அடியொதுங்கி - ஒருவன் இட்டுச்சென்ற அடிச்சுவட்டின்மேல் அடியிட்டு  
      நடந்து சென்றவள் ஒருபால் ஒதுங்கி, தொடி முன்கை தன்கண்ணி  
      காரிகையாகத் திருத்தினாள் - வளையலணிந்த தனது முன்கையாலே தன்  
      தலையிற் சூடியுள்ள மாலையை அழகுறத் திருத்தினாள், கேள் காண்மின்  
      - ஆதலால் அவன் அவளுடைய காதலனே ஆதல் வேண்டும்.  
      இக்காட்சியினையும் காணுமின் என இவ்வாறு உவந்தவை  
      காட்டாநின்றனர்;  
       
            (வி-ம்.) சுடுநீர் - தீயிலிட்டுச் சுட்ட நீர்மை 
      என்க; சுடச்சுடஒளி  
      விடும் பொன் என்பவாகலின், நன்கு ஒளிவிடும் பொன்குழைபோல   | 
 
  |   
	
				
				 | 
				 
			 
			 |