அறா அற்க - நினக்கு அம் மழையினாலே உண்டான வெள்ளம்  
      பெருகி என்றும் வற்றாது நிறைவதாக.  
       
            (வி-ம்.) கண்ணி - தலையிற்சூடும் மாலை. தார்- 
      மார்பிலணியும்  
      மாலை. கோதை - மாலை; பெரும்பாலும் மகளிர் அணியும் மாலையையே 
      இச்சொல் குறிக்கும். ஈகைபண்ணி அதன் பயன் கொள்ளும்பொருட்டு  
      ஆடலால் என்க. நாள்நாள் - நாள்தோறும். கையுறை - பொன்மீன்  
      பொன்னண்டு பொன்னிறவு முதலியன. பூத்த - பொலிந்த. புகை -  
      நறுமணப்புகை. அவி - தெய்வத்திற்கிடும் உண்டி. புலராமை -  
      இப் பொருள்கள் சுருங்காமைப் பொருட்டு. மறாஅற்க - மறாதொழிக.  
      அறாஅற்க - வற்றாதொழிக. வையை: அண்மை விளி.  
       
            இங்ஙனம் கூறித் தலைவனை நினது பரத்தைமையை யாங்கள் 
       
      நன்கறிந்தோம். இவ் வையைவெள்ளம் அறாதாக நீ இன்னும் அவரோடே 
      ஆடப் போதலே நன்றென்று தோழி குறிப்பாலே வாயில் மறுத்தமை உணர்க.  
       
            (பரிமே.) 51. ஈகை - தானம். பயனாகிய போகத்தை 
      நுகர வேண்டி.  
       
            52. கையுறையாகிய பொன்மீன் முதலியனவும்  
       
            53. ஈரணிபுலர்த்தும் பொலிந்த புகையும்  
        | 
 
  |