பாண்டியனது அரண்மனை, இதழ் அகத்து 
      அரும்பொகுட்டு அனைத்து  
      - அவ் விதழ்களின் நடுவே அமைந்துள்ள அரிய அழகுடைய  
      பொன்பொகுட்டையே ஒப்பதாம், தண்தமிழ்க் குடிகள் - அவ்  
      வேந்தனது அரண்மனையைச் சூழ்ந்திருந்து வாழாநின்ற குளிர்ந்த  
      தமிழ்பேசும் குடிமக்கள், தாதின் அனையர் - அம் மலரின்கண் உள்ள  
      மகரந்தத் துகளையே ஒப்பாவர், பரிசில் வாழ்நர் - அவரை நாடி  
      வருகின்ற பரிசில்பெற்று வாழுமியல்புடைய இரவலர், தாது உண்  
      பறவை அனையர் - அம் மலர்க்கண் தாதுண்டற்கு வந்து குழுமுகின்ற 
      வண்டுகளையே ஒப்பாவர், எம் பேர் ஊர் - இத்தகைய எழிலுடைய  
      எமது பெரிய மதுரையில் வாழ்வோர், பூவினுள் பிறந்தோன் நாவினுள்  
      - பிறந்த நால்மறை கேள்வி நவில்குரல் ஏம இன் துயில் எடுப்ப எழுதல்  
      அல்லதை - அத் தாமரைப் பூவினகத்தே தோன்றிய பிரமதேவனுடைய  
      நாவின்கண் தோன்றிய நான்காகிய வேதங்களை வைகறைப் பொழுதில்  
      அந்தணர்கள் ஓதாநிற்ப அவ் விசை தமது மிக்க இன்பமுடைய  
      உறக்கத்தைப் போக்கி உணர்த்தி எழுப்புதலாலே நாடோறும் எழுதலன்றி, 
      வஞ்சியும் கோழியும் போல - சேரன் தலைநகரமாகிய வஞ்சியில்  
      வாழ்வாரையும் சோழன் தலைநகரமாகிய உறையூரில் வாழ்வாரையும்  
      போல, கோழியில் துயில் எழாது - கோழியினது கூக்குரல் துயில் அகற்ற 
      எழார், வாழிய - அது நெடிது வாழ்க.  
       
            (வி-ம்.) மாயோன் என்பது ஈண்டுக் கரிய நிறமுடையோன் 
      என 
      அதன் பொருள் குறியாது திருமால் என்னும் பெயர் மாத்திரையாய்  
      நின்றது. கொப்பூழ் - உந்தி. புரையும் - ஒக்கும். சீர் - அழகு. 11ஆம்  
      அடிக்கண்ணதாகிய எம் என்பதனைச் சீரூர் என்பதனோடும் ஒட்டுக.  
      அகவிதழ் என மாறுக. தெருவம்: அம், சாரியை, பொகுட்டு - தாமரை  
      மலரகத்துள்ள கொட்டை. அண்ணல் - பாண்டியன். கோயில் -  
      அரண்மனை. தமிழ்க்குடிகள் - தமிழ் பேசுவோராகிய குடிகள் என்க.  
      'தாதுண்பறவை' என்றது வண்டுகளை. பரிசில் வாழ்நர் - பரிசில் பெற்று  
      அதனால் வாழும் இயல்புடையோர். அவராவார், நல்லிசைப் புலவர்,  
      பாணர், கூத்தர் முதலியோர்.  
       
            பூவினுட் பிறந்தோன் - பிரமதேவன். நான்மறை - 
      நான்காகிய  
      வேதம். ஏம இன்றுயில்: ஒருபொருட் பன்மொழி. இயற்கை  
      யின்பத்தினையும் காம இன்பத்தினையும் உடைத்தாகிய துயில்  
      எனினுமாம். ஏமம் - இன்பம். அல்லதை என்புழி ஐகாரம்  
      பகுதிப்பொருளது. வாழிய: அசை எனினுமாம். வஞ்சி: சேரன் தலைநகர். 
      கோழி - உறையூர். இது சோழன் தலைநகர். வஞ்சியிலும் கோழியிலும்  
      வாழ்வோர் கோழி கூவுதலாலே துயிலுணர்ந்து எழுமாறு எழார் என்பது  
      கருத்து.  
       
            இதனால் மதுரைக்கே சிறந்துரிமையுடைய அறிவு வளம் 
      நன்கு  
      உணர்த்தப்பட்டமை உணர்க.  
       
            இச் செய்யுளில் வரும் மாலையணி என்னும் உவமையழகினையும் 
       
      அதன் பொருட்சிறப்பினையும் உணர்ந்தின்புறுக.   | 
 
  |   
	
				
				 | 
				 
			 
			 |