உ  
        கடவுள் துணை  
      
        பரி பாடல்
        மூலமும் உரையும்  
        ----- 
        முதற் பாடல் 
         
        திருமால்  
      
      பொருட் சுருக்கம்  
       
            (11) சேவலங் கொடியோய்! (27) அண்ணலே!! (28) 
      இலங்குபூண் 
      மாலே! (36) திருமறு மார்ப! (65) வாய் மொழிப் புலவ!  
       
            1 - 5: நீ, ஆதிசேடனுடைய ஆயிரந்தலைகளும் நின் 
      திருமுடிக்கு 
      மேலே விரிந்து நிழற்றாநிற்ப மார்பினிடத்தே திருமகள் வீற்றிருப்ப  
      விளங்காநின்றனை; மேலும் பலதேவனாகவும் இருக்கின்றனை.  
       
            6 - 13: நீ, தாமரைமலரை ஒத்த கண்களை உடையை;  
      காயாம்பூவை ஒத்த திருமேனியை உடையை; திருமகள் விரும்பியுறையும் 
      மார்பினை உடையை; அந்த மார்பினிடத்தே விளங்குகின்ற  
      கௌத்துவமணி அணியை உடையை; பொன்னாடையை  
      அணிந்துள்ளனை; நினது பெருமையை அந்தணருடைய வேதம்  
      விளங்கக் கூறாநிற்கும்.  
       
      
        14 - 25: * * * * * 
       
       
            26 - 32: நீ, நின்னோடு பகைத்தெழுந்தவருடைய வலி 
      கெட  
      வென்று போரிடத்தே மேம்பாடுடைய தலைவனாக விளங்கா நின்றனை; 
      நீ காமனும் சாமனுமாகிய இருவருக்கும் தந்தை   | 
 
 |   
	
				
				 | 
				 
			 
			 |