பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்943

18  கலைஇய கண்புருவந் தோணுசுப் பேஎர்
சிலைமழைபோ றாழ்ந்திருண்ட கூந்த லவற்றை
விலைவள மாற வறியா தொருவன்
வலையகப் பட்ட தென் னெஞ்சு
22  வாழிய கேளிர்
23 பலவுஞ்சூ டேற்றித் தெளித்தவ னென்னை
முலையிடை வாங்கி முயங்கின னீத்த
(1) கொலைவனைக் காணேன்கொல் யான்
26 காணினு மென்னை யறிதிர் கதிர்பற்றி 
யாங்கெதிர் நோக்குவன் (2) ஞாயிறே யெங்கேள்வன்
யாங்குள னாயினுங் காட்டீமோ காட்டாயேல்
வானத் தெவன்செய்தி நீ
30 ஆரிரு ணீக்கும் விசும்பின் மதிபோல
நீருள்ளுந் தோன்றுதி ஞாயிறே யவ்வழித் 
தேரை தினப்பட லோம்பு
33 நல்கா வொருவனை நாடியான் (3) கொள்வனைப்
பல்கதிர் சாம்பிப் பகலொழியப் பட்டீமோ
செல்கதிர் ஞாயிறே நீ

எ - து: அங்ஙனங் கூறி, அவனோடே கலந்த கண் புருவம் தோள் நுசுப்புச் சிலமழைபோலே நீண்டிருண்ட கூந்தல் என்கின்றவற்றின் அழகைப் பெறும் விலையின் வளப்பத்தை அறிந்து கொடுத்தவனிடத்து உள்ளவற்றைக் கொள்ளுதல் அறியாதே ஒருவன் கூறிய (4) பொய்யாகிய வலையிலே என் நெஞ்சு அகப்பட்டுவிட்டது; என்றுகூறி, பின்னும் (5) கேளீர்! வாழ்வீராக; என 


1. "கொலைவன் குடிய’’ (கலி. 103 : 15.) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

2. "அவனைத் திரைதரு முந்நீர் வளாஅக மெல்லா, நிரைகதிர் ஞாயிற்றை நாடென்றேன்’’ கலி. 146 : 27 - 29.

3. ‘உரைப்பனை’ என்பதற்கு, ‘உரைக்கும் அளவும்’ என்று பொருளும், ‘உரைப்பனை, திசைச்சொல்’ என்று விசேடக் குறிப்பும் எழுதி யிருப்பதை நோக்குக; கலி. 144 : 13.

4. ‘பொய்வலைப் படூஉம் பெண்டு’ ஐங்குறு. 283.

5. ‘இர்’ ஈறு ஈராய் விளியேற்கு மென்பது, தொல். விளி. சூ. 12. நச். உரையால் அறியலாகும்.