பக்கம் எண் :

100கலித்தொகை

5தொன்னலந் தொலைபீங்கியாந் துயருழப்பத் துறந்துள்ளார்
துன்னிநங் காதலர் துறந்தேகு மாரிடைக்
கன்மிசை யுருப்பறக் கனைதுளி சிதறென
வின்னிசை யெழிலியை யிரப்பவு மியைவதோ;
9புனையிழா யீங்குநாம் புலம்புறப் பொருள்வெஃகி
முனையென்னார் காதலர் முன்னிய வாரிடைச்
சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக்
கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ;
13ஒளியிழா யீங்குநாந் துயர்கூரப் பொருள்வயி
னளியொரீஇக் காதல ரகன்றேகு மாரிடை
முளிமுதன் மூழ்கிய வெம்மைதீர்ந் துறுகென
வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ;
எனவாங்கு;
18செய்பொருட் சிறப்பெண்ணிச் செல்வார்மாட் டினையன
தெய்வத்துத் திறனோக்கித் தெருமர றேமொழி
வறனோடின் வையகத்து வான்றருங் கற்பினா
ணிறனோடிப் பசப்பூர்த லுண்டென
வறனோடி விலங்கின்றவ ராள்வினைத் திறத்தே.

இதுதலைமகன் பொருள்வயிற்பிரிந்த இடத்து அவன் போகியகாட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைமகள் அவர்பொருட்டாக நாம் இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல்நங்கற்புக்கு இயைவதோ வென, கேட்ட தோழி அவ்வாற்றானேமீண்டனர் நீ கவலவேண்டா வெனக் கூறியது.

இதன் பொருள்.


(1)
பாடின்றிப்பசந்தகண் பைதல பனிமல்க
வாடுபு வனப்போடிவணங்கிறை வளையூர
வாடெழி 1லழிவஞ்சா (2)தகன்றவர் திறத்தினி
நாடுங்கா னினைப்பதொன்றுடையேன்மன் னதுவுந்தான்


1. (அ)செய்புவென்னும் வினையெச்சம் நிகழ்காலங் குறித்து வருதற்கு ‘வாடுபுவனப்போடி வணங்கிறை வளையூர’ என்பது மேற்கோள்.தொல். வினை. சூ. 33. தெய்; 31 நச்; இ - வி. சூ. 246 (ஆ) ‘வாடுபுவனப்போடி’கலி. (132 :14)

2. காலீற்றுவினையெச்சம் நிகழ்வும் எதிர்வும் பற்றிவருதற்கு ‘அகன்றவர்

(பிரதிபேதம்) 1 அழிபஞ்சாதகன்றவர்.