5 | வோதுடை யந்தண னெரிவலஞ் செய்வான்போ லாய்தூவி யன்னந்தன் னணிநடைப் பெடையொடு மேதகத் திரதரூஉ மிகுபுன னல்லூர; | 8 | தெள்ளரிச் சிலம்பார்ப்பத் தெருவின்கட் டாக்கிநின் னுள்ளங்கொண் டொழித்தாளைக் குறைகூறிக் கொளநின்றாய் துணிந்தது பிறிதாகத் துணிவில ளிவளெனப் பணிந்தாய்போல் வந்தீண்டுப் பயனில மொழிவாயோ; | 12 | பட்டுழி யறியாது பாகனைத் தேரொடும் விட்டவள் வரனோக்கி விருந்தேற்றுக் கொளநின்றாய் நெஞ்சத்த பிறவாக நிறையில ளிவளென வஞ்சத்தான் வந்தீங்கு வலியலைத் தீவாயோ; | 16 | இணர்ததை தண்காவி னியன்றநின் குறிவந்தாள் புணர்வினிற் புகன்றாங்கே புனலாடப் பண்ணியாய் தருக்கிய பிறவாகத் தன்னில ளிவளெனச் செருக்கினால் வந்தீங்குச் சொல்லுகுத் தீவாயோ; எனவாங்கு; | 21 | தருக்கேம் பெருமநின் னல்கல் விருப்புற்றுத் தாழ்ந்தாய்போல் வந்து தகவில செய்யாது சூழ்ந்தவை செய்துமற் றெம்மையு முள்ளுவாய் வீழ்ந்தார் விருப்பற்றக் கால். |
இதுவும் அது. இதன் பொருள். போதவிழ் பனிப்பொய்கைப் புதுவது தளைவிட்ட தாதுசூழ் தாமரைத் தனிமலர்ப் புறஞ்சேர்பு காதல்கொள் (1)வதுவைநாட் கலிங்கத்து 1ளொடுங்கிய
1. (அ) "சாணிடை நெடிய வாட்கண் டளையவிழ் குவளை பூப்பப், பூணுடை முலையின் பாரம் பொறுக்கலாச் சுளிவின் மேலு, நாணட நடுங்கிக் கையா னகை முகம் புதைத்த தோற்றஞ், சேணிடை யரவு சேர்ந்த திங்களை யொத்ததன்றே" சீவக. 2461. (ஆ) "கைம்மலரின் வீரனவள் கைம்முகிழ் பிடிப்ப, மெய்ம்மயி ரெறிந்துமணி வேர்நுத லரும்பிச் செ..........................சீறடிகள் செவ்வனிட மாட்டா, வம்மயிலி னாணதனை யாவரறை கிற்பார்" (பிரதிபேதம்) 1ஓங்கிய.
|