| மொண்ணுத லாயத்தா (1) 1ரோராங்குத் திளைப்பினு (2) முண்ணுனை 2தோன்றாமை முறுவல்கொண் டடக்கித்தன் கண்ணினு முகத்தினு நகுபவள் பெண்ணின்றி யாவருந் தண்குரல் கேட்ப நிரைவெண்பன் | 10 | மீயுயர் தோன்ற நகாஅ நக்காங்கே (3) பூவுயிர்த் தன்ன புகழ்சா லெழிலுண்க ணாயிதழ் மல்க வழும்; | 13 | ஒஒ! அழிதகப் பாராதே 3யல்லல் குறுகினங் காண்பாங் கனங்குழை 4பண்பு; | 15 | என்று, (4) எல்லீரு மென்செய்தீ ரென்னை நகுதிரோ நல்ல நகாஅலில் 5மற்கொலோ யானுற்ற வல்ல லுறீஇயான் மாய மலர்மார்பு புல்லிப் புணரப் பெறின்; | 19 | எல்லாநீ, உற்ற தெவனோமற் 6றென்றீரே லெற்சிதை செய்தா னிவனென வுற்ற திதுவென வெய்த வுரைக்கு 7முரனகத் துண்டாயிற் (5) பைதல வாகிப் பசக்குவ மன்னோவென் னெய்தன் மலரன்ன கண்; |
1. ஓராங்கு, ஒருதன்மைப் படலென்னும் பொருள்படுவதோர் இடைச்சொல்; பதிற். 69 : 16. கலி. 12 : 18, 18 : 7, 92 : 31. புறம். 16 : 19. இச்சொல், “ஓராங்கு” என்றும் வரும்; பதிற். 31 : 2. கலி. 50 : 7. புறம். 238 : 15, 304 : 5, 326 : 11, 370 : 2. 2. ‘‘நகைமொக்கு ளுள்ளது’’ குறள். 1274. 3. (அ) ‘‘போதெழி லுண்கண் புகழ்நல னிழப்ப’’ (ஆ) ‘‘பூக்கவின் கொண்ட புகழ்சா லெழிலுண்கண்’’ கலி. 122 : 2, 131 : 4. 4. அறிவர்(?) கேட்பத் தலைமகள் கூற்றுவந்ததற்கு, “எல்லீரு மென்செய்தீ ரென்னை நகுதிரோ’’ என்பது மேற்; தொல். செய். சூ. 196. பேர், நச். 5. (அ) ‘‘பசந்தகண் பைதல பனிமல்க’’ கலி. 16 : 1. (ஆ) ‘‘தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துணராப் பைதலுழப்பதெவன்’’ (இ) ‘‘படலாற்றா பைத லுழக்குங் கடலாற்றாக் காமநோய் செய்தவென் கண்’’ குறள். 1172; 1175. (பிரதிபேதம்)1ஓராங்கு, 2தோன்றாமல், 3அல்ல குறுகினும், 4பண்பு எல்லீருமென்செய்திர், 5மற்கொல்லோ, 6என்றிரேல், 7முரணகத்து.
|