பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்907

எல்லாநீ, என்னணங் குற்றனை யார்நின் னிதுசெய்தார்
நின்னுற்ற வல்ல லுரையென வென்னை
வினவுவீர் தெற்றெனக் கேண்மி னொருவன்
குரற்கூந்தா லென்னுற்ற வெவ்வ நினக்கியா
னுரைப்பனைத் தங்கிற்றெ னின்னுயி ரென்று
மருவூட்டி மாறி யதற்கொண் டெனக்கு
மருவுழிப் பட்டதென் னெஞ்சு;
16 எங்குந் தெரிந்தது கொள்வே னவனுள் வழி;
17  பொங்கிரு முந்நீ ரகமெல்லா நோக்கினை
திங்களுட் டோன்றி யிருந்த குறுமுயா
லெங்கே ளிதனகத் துள்வழிக் காட்டீமோ
காட்டீயா யாயிற் கதநாய் கொளுவுவேன்
வேட்டுவ ருள்வழிச் செப்புவே னாட்டி
மதியொடு பாம்பு மடுப்பேன் மதிதிரிந்த
வென்னல்ல றீரா யெனின்;
24 என்றாங்கே, உண்ணின்ற வெவ்வ முரைப்ப மதியொடு
வெண்மழை யோடிப் புகுதி சிறிதென்னைக்
கண்ணோடி னாய்போறி நீ;
27 நீடிலைத் தாழைத் துவர்மணற் கானலு
ளோடுவே னோடி யொளிப்பேன் பொழிறொறு
நாடுவேன் கள்வன் கரந்திருக்கற் பாலன்கொ
லாய்பூ வடும்பி னலர்கொண் டுதுக்காணெங்
கோதை புனைந்த வழி;
32 உதுக்காண், சாஅய் மலர்காட்டிச் சால்பிலான் யாமாடும்
பாவைகொண் டோடி யுழி;
34 உதுக்கா[ணந்](ண்) தொய்யில் பொறித்த வழி;
35 உதுக்காண், தையா றேறெனத் தேற்றி யறனில்லான்
பைய மயங்கி யுழி;
37அளியவென் னுள்ளத் துயவுத்தே ரூர்ந்து
விளியாநோய் செய்திறந்த வன்பி லவனைத்