9 | எல்லாநீ, என்னணங் குற்றனை யார்நின் னிதுசெய்தார் நின்னுற்ற வல்ல லுரையென வென்னை வினவுவீர் தெற்றெனக் கேண்மி னொருவன் குரற்கூந்தா லென்னுற்ற வெவ்வ நினக்கியா னுரைப்பனைத் தங்கிற்றெ னின்னுயி ரென்று மருவூட்டி மாறி யதற்கொண் டெனக்கு மருவுழிப் பட்டதென் னெஞ்சு; |
16 | எங்குந் தெரிந்தது கொள்வே னவனுள் வழி; |
17 | பொங்கிரு முந்நீ ரகமெல்லா நோக்கினை திங்களுட் டோன்றி யிருந்த குறுமுயா லெங்கே ளிதனகத் துள்வழிக் காட்டீமோ காட்டீயா யாயிற் கதநாய் கொளுவுவேன் வேட்டுவ ருள்வழிச் செப்புவே னாட்டி மதியொடு பாம்பு மடுப்பேன் மதிதிரிந்த வென்னல்ல றீரா யெனின்; |
24 | என்றாங்கே, உண்ணின்ற வெவ்வ முரைப்ப மதியொடு வெண்மழை யோடிப் புகுதி சிறிதென்னைக் கண்ணோடி னாய்போறி நீ; |
27 | நீடிலைத் தாழைத் துவர்மணற் கானலு ளோடுவே னோடி யொளிப்பேன் பொழிறொறு நாடுவேன் கள்வன் கரந்திருக்கற் பாலன்கொ லாய்பூ வடும்பி னலர்கொண் டுதுக்காணெங் கோதை புனைந்த வழி; |
32 | உதுக்காண், சாஅய் மலர்காட்டிச் சால்பிலான் யாமாடும் பாவைகொண் டோடி யுழி; |
34 | உதுக்கா[ணந்](ண்) தொய்யில் பொறித்த வழி; |
35 | உதுக்காண், தையா றேறெனத் தேற்றி யறனில்லான் பைய மயங்கி யுழி; |
37 | அளியவென் னுள்ளத் துயவுத்தே ரூர்ந்து விளியாநோய் செய்திறந்த வன்பி லவனைத் |