பக்கம் எண் :

மூன்றாவது மருதம்397

தேவர்கோமான் துணை

கலித்தொகை

மூலமும்

நச்சினார்க்கினியருரையும்.

மூன்றாவது மருதக்கலி.

(66.) வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட
ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண்
டோங்குய ரெழில்யானைக் கனைகடாங் கமழ்நாற்ற
மாங்கவை விருந்தாற்றப் பகலல்கிக் கங்குலான்
5 வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர்
தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறுமுல்லை
பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய
பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர;
9 அணைமென்றோள் யாம்வாட வமர்துணைப் புணர்ந்துநீ
மணமனையா யெனவந்த மல்லலின் மாண்பன்றோ
பொதுக்கொண்ட கவ்வையுட் பூவணிப் பொலிந்தநின்
வதுவையங் கமழ்நாற்றம் வைகறைப் பெற்றதை;
13 கனலுநோய்த் தலையுநீ கனங்குழை யவரொடு
புனலுளா யெனவந்த பூசலிற் பெரிதன்றோ
தார்கொண்டா டலைக்கோதை தடுமாறிப் பூண்டநின்
னீரணி சிதையாதெம் மில்வந்து நின்றதை;
17 தணந்ததன் றலையுநீ தளரிய லவரொடு
துணங்கையா யெனவந்த கவ்வையிற் கடப்பன்றோ