| 
 (கு - ரை.)   2. நெற்கவளம் : புறநா.   184 : 1, 337 : 14; “காய்நெற் கற்றையின், பிடிநலந்   தழீஇவரும் பெருங்கைக் குஞ்சரம்” (சீவக.   81). நெய்ம் மிதி : ‘நெய்ம்மிதி கவளம்’ (பெரும்பாண்.   394); “நெய்ம்மலி கவளங் கொள்ளாது” (சீவக.   1076); “நெய்ம்மிதி கவளந் தெவிட்டிநின்   றடர்க்கு நிழல்சுளி தறுகண்மால் யானை”, “கைம்முகந்   தெடுத்த நெய்ம்மிதி கவளங் களித்தெறி மும்மதக்   களிறு” (கூர்ம. சூரியன் மரபு. 8, 22) 4. பலவின்பாற்   படர்க்கைவினைக்குறிப்புமுற்று வினையெச்சக்   குறிப்பானதற்கு மேற்கோள்; நன். சூ. 350, மயிலை;   நன். வி. சூ. 351; இ. வி. சூ. 250. 7. உண்ணுதற்குரிய நீரைப்புக   விடாது தடுத்தல் பகைவர்க்குரிய தொழிலாதலின்   நீரின்மை கூறப்பட்டது. 9.புறநா. 36 : 11. 10. வய என்னும் உரிச்சொல் ‘வலி’   என்னும் பொருளில் வந்ததற்கு மேற்கோள்; இ. வி.   சூ. 290, உரை. 11 - 2. புறநா. 390 : 1 - 2; “மறவையா   யென்னுயிர்மேல் வந்தவிம் மருண்மாலை” (சிலப்.   7 : 42) 16. புறநா. 36 : 13. 11 - 6. “அறவை......காணுங்காலே”   என இது செம்பொருட்செவியுறை; தொல். செய். சூ.   128, பேர். மு. அகத்தரசற்கு அழிந்து   கூறியதற்கு மேற்கோள்; தொல். புறத்திணை. சூ.   10, இளம். ஆவூர் என்பது சோழ நாட்டின்கண்   காவிரியின் தென்பாலுள்ளதான ஒரு பழையவூர் ;   பாடல்பெற்ற சிவஸ்தலம். நினதெனத்திறத்தல் அல்லது   போரொடு திறத்தல் அரசர்க்குரிய இயல்பென்று   நினைந்து கூறினமையின், இச்செய்யுள்   அரசவாகையாயிற்று.  (44) 
 1. “அம்ம கேட்பிக்கும்” (தொல். இடை. சூ. 28) |