சிறையும், தீ மிகின் நிழலும், காற்று மிகின் வலியும் இல்லாதவாறு போல, நீ மிக்கெழின் எதிர்ந்துய்யும் வேந்தர் பிறரில்லை; எவரேனும் உளராயின், அவர் வாழ்வும் அரணும், ஈயலும் அதன் புற்றும் போலச் சிறிது போதிற் கெடுதல் திண்ணம் என இப் பாட்டின்கண் புகழ்ந்து பாராட்டுகின்றார்.
| நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின் மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை வளிமிகின் வலியு மில்லை யொளிமிக் கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி | 5. | தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து | | கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக் கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே அளியரோ வளியரவ னளியிழந் தோரே நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த | 10. | செம்புற் றீயல் போல | | ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே. (51) |
திணை: வாகை. துறை: அரசவாகை. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.
உரை: நீர் மிகின் சிறையு மில்லை - நீர் மிகுமாயின் அதனைத் தாங்கும் அரணு மில்லை; தீ மிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை - நெருப்பு மிகுமாயின் உலகத்து நிலை பெற்ற உயிர்களை நிழல் செய்யும் நிழலுமில்லை; வளி மிகின் வலியும் இல்லை - காற்று மிகுமாயின் அதனைப் பொறுக்கும் வலியு மில்லை; ஒளி மிக்கு - விளக்கம் மிக்கு; அவற்றோர் அன்ன சினப் போர் வழுதி - அவற்றை யொத்த சினம் பொருந்திய போரையுடைய வழுதி; தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் - குளிர்ந்த தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொது வென்று கூறப் பொறானாய்; போரெதிர்ந்து - போரை யேற்று; கொண்டி வேண்டுவனாயின் - திறையை வேண்டுவனாயின்; கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கற்றனர் - கொள்க வென்று சொல்லி முன்னே கொடுத்த மன்னர் நடுக்கம் தீர்ந்தார்; அளியரோ அளியர் - கொடாமையின் யாவராலும் மிக இரங்கத்தக்கார்; அவன் அளியிழந்தோர் - அவனது அருளை யிழந்த அரசர்; நுண் பல சிதலை - நுண்ணிய பல கறையான்; அரிது முயன்று எடுத்த - அரிதாக உழந்தெடுக்கப்பட்ட; செம்புற் றீயல் போல - செம்புற்றினின்றும் புறப்பட்ட ஈயலைப்போல; ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோர் ஒரு - பகற் பொழுதின்கண் வாழும் உயிர்வாழ்க்கையின் பொருட்டுச் சுழல்வோர் எ-று. |